_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...
Showing posts with label பாலஸ்தீன். Show all posts
Showing posts with label பாலஸ்தீன். Show all posts

சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம். 2006-ம் ஆண்டு முதலேயே இஸ்ராயீல் ராணுவம் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் மூடிவிட்டது. உணவு, மருந்து பொருட்கள்கூட வெளியிலிருந்து உள்ளே செல்ல முடியாது. இதனால் காஸா பகுதி மக்கள் பஞ்சத்தாலும், பட்டினியாலும், நோய்களாலும் கும்பல் கும்பலாக செத்து மடிகின்றனர். இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து உலகம் முழுவதுமுள்ள மனித நேய ஆர்வலர்கள் ‘‘காஸாவை விடுவிப்போம்’’ – என்ற முழக்கத்துடன் உணவு, மருந்து பொருட்களை படகுகளில் ஏற்றிக் கொண்டு காசாவுக்கு செல்ல முயற்சி செய்தனர்.

இஸ்ரேலிய அரசு 300க்கும் மேற்பட்ட பிதுவின்-அரேபிய பழங்குடியின கிராமங்கள் உள்ள தெற்கு நெகவ் பாலைவனப் பகுதியில் உள்ள வீடுகளை இடித்து தரை மட்டமாக்கியது.

இஸ்ரேலால் அங்கீகரிக்கப்படாத 45 கிராமங்களில் அல்-அராகிப் கிராமமும் ஓன்று. இங்கு 40 வீடுகள் உள்ளன. அல்-அராகிப் என்ற கிராமம் முழுவதும் புல்டோசர்களால் இடித்து அழிக்கப்பட்டது அங்கு வாழ்ந்த மக்களின் வீடுகள்,கால்நடைகள்,மரங்கள் மற்றும் உடைமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

Negev Co-existence Forum-ன் டைரக்டர் ஹை நோச் கூறுகையில்; "இஸ்ரேலிய 5 புல்டோசர்கள் காலை 5.30 மணியளவில் கிராமத்திற்குள் புகுந்தன. 3 முதல் 4 மணி நேரத்திற்குள் எல்லா வீடுகளையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டன என்று அதிர்ச்சியுடன் கூறினார்.


காஸாவுக்கான மனிதாபிமான உதவிக் கப்பலுக்கெதிராக அண்மையில் இஸ்ரேல் மேற்கொண்ட மனிதாபிமானமற்ற இராணுவ நடவடிக்கை உலகம் பூராகவும் மட்டுமன்றி இஸ்ரேலினுள்ளேயும் பலமான கண்டனக் குரல்களை எழுப்பியிருந்தது.



அண்மைக் காலங்களில் இஸ்ரேல் பாலஸ்தீன மண்ணுக்கும் அதன் மக்களுக்கும் எதிராக மேற்கொண்டுவரும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கும் அதன் கொள்கை வகுப்புக்களுக்கும் எதிராக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் மனிதாபிமானம் படைத்த யூத செயற்பாட்டாளர்கள் கூட இஸ்ரேலுக்கெதிராக தமது அதிரிப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகையவர்களில் சிலர் காஸா மீதான இஸ்ரேலின் கடின முற்றுகையினை உடைத்து அதன் பலஸ்தீன ஆக்கிரமிப்பினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அடம்பெறும் நடவடிக்கைகளுக்கு கூட ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.

இவ்வாறு இஸ்ரேலினுடைய பாசிசவாத நடவடிக்கைகளை இஸ்ரேலியர்கள் கூட விமர்சிக்கும், கண்டிக்கும் அல்லது எதிர்த்து குரலெழுப்பும் நிலை ஏற்பட்டுள்ள இவ்வேளை, எந்த யூத மக்களுடைய பெயரால் இஸ்ரேல் இத்தகைய மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை அப்பாவி பலஸ்தீனர்களுக்கெதிராக அரங்கேற்றி வருகின்றதோ அத்தகைய யூத பெரும்பான்மை ஏன் அமைதியாகவுள்ளது அல்லது இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகளை கண்டுகொள்ளதில்லையா என்ற வினா எழலாம்.

ஏனெனில் இஸ்ரேல் தனது குற்றங்களை யூத மக்களின் பெயரால் இழைத்து “பொதுமக்கள் அவசியத்தன்மை (Public necessity)” என்ற எதிர்வாதத்தை சர்வதேச சட்டத்தில் முன்வைத்து தப்பித்துக்கொள்ள முயற்சிப்பது இஸ்ரேலின் வழக்கமான செயற்பாடாகிவிட்டது.

முன்னாள் இஸ்ரேல் ஜனாதிபதியான சைமன் பெரஸ், ஒருமுறை யூதர்களின் புலமைத்துவ செயற்பாடுகளை (Jewish intellectual activism), ‘யூத மக்களின் விதியை மாற்றியமைக்க திட்டமிடல்’ மற்றும் ‘உலகின் விதியை மாற்றியமைக்க ஒத்துழைத்தல்’ என இரண்டு பிரிவாக பிரித்துக் கூறியிருந்தார்.


 


ஸனா: கடந்த சிலவாரங்களுக்கு முன் டெட்ராய்ட் விமான நிலையத்தில் அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த முயற்சி தொடர்பாக நைஜீரிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதனால் ஏமன் நாட்டில் இருக்கும் போராளிகளை அழிக்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கு ஏமனில் உள்ள முஸ்லிம் மார்க்க ஆலிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அல்கொய்தா போராளிகளை ஒழிப்போம் என்ற போர்வையில் ஏமன் நாட்டை தாக்க அமெரிக்க ராணுவத்தை அனுப்பினால் அமெரிக்கா கடும் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியுருக்கும் மேலும் அதற்கு எதிராக புனிதப்போர் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏமன் தலைநகர் ஸனாவில் நடந்த மாநாட்டில் முஸ்லிம் மார்க்க ஆலிம்கள் பலர் கையெழுத்திட்டு இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். ஆனால் ஏமனுக்கு ராணுவத்தை அனுப்பும் எண்ணம் இல்லை என அமெரிக்கா மறுத்துள்ளது.


 

HEZBOLLAH - LEBANON

HAMAS - PALESTINE

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நாங்களும் ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போர்புரிவோம் என லெபனானில் ஹமாஸின் அரசியல் பிரதிநிதி அலி பராகா கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, "நாங்கள் இங்கு(லெபனானில்)விருந்தாளியாகவே தங்கியுள்ளோம் ஆனால் எங்கள் கோட்பாட்டில் எந்த மாற்றமுமில்லை. இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தும்பொழுது எங்கள் கைகள் விலங்கிடப்படாது. எங்கள் சகோதரர்களுடன் இணைந்து நாங்களும் போராடுவோம். இஸ்ரேலை துரத்துவோம்." என்றார் அவர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குபகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட இரண்டு ஹமாஸ் உறுப்பினர்களின் நினைவுதினத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதுதான் அலி பராக்கா இதனை தெரிவித்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜுலையில் துவங்கி 33 நாள்கள் நடந்த இஸ்ரேல்-ஹிஸ்புல்லாஹ் போரில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 10 லட்சம் லெபனான் மக்களும், 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரையிலான இஸ்ரேலியர்களும் இடமாற்றப்பட்டனர்.ஹிஸ்புல்லாஹ்வின் பலத்தை அழிப்பேன் என்று சபதமிட்டு தாக்குதல் நடத்திய யஹூத் ஓல்மர்ட்டின் திட்டம் தவிடுபொடியானதுதான் மிச்சம்.வேறு எந்த பயனும் விளையவில்லை.


 

 

 

காஸா மீதான இஸ்ரேலிய யுத்தத்தில் உயிருடன் எரிந்துபோன பலஸ்தீன் குழந்தைகள்

 

ரமல்லா2009 ஆம் ஆண்டு 473 குழந்தைகள், 126 பெண்கள் உட்பட 1594 பலஸ்தீனர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கொன்று குவித்துள்ளது என Tadamun எனும் மனித உரிமைகளுக்கான சர்வதேச ஒருமைப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 

 

கடந்த புதன்கிழமை (30.12.2009) மேற்படி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 1460 பேர் காஸா மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போதும், ஏனைய 134 பேரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மேற்குக் கரை, காஸா பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதும் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. 

 

1967 ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்துவரும் அரபு- இஸ்ரேலிய மோதல் வரலாற்றில் கடந்த ஜனவரி மாதம் மிக மோசமான படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள மாதமாகும். அந்த மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 30 பேர் என்ற வீதத்தில் 1076 பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இதேவேளை, மனித உரிமைகளுக்கான பலஸ்தீன் மையம் குறிப்பிடுகையில், கடந்த வாரம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கைகளின்போது ஆறு பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு ஒரு பெண்மணி, ஒரு குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

 

கடந்த புதன்கிழமை மேற்படி பலஸ்தீன் மையம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கடந்த ஒருவார காலத்துக்குள் மட்டும் மேற்குக் கரையில் 28, காஸாவில் 2 என அடுத்தடுத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, 26 பலஸ்தீனர்களைச் சுற்றிவளைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் அந்த அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸாவின் அனைத்து எல்லைக் கடவைகளையும் மூடிவைத்துள்ளதோடு, ஒருசிலவற்றைத் திறந்தாலும் கடலில் மீன்பிடித் தொழிலுக்காகச் செல்லும் பலஸ்தீன் மீனவர்களை விரட்டிவிடுவதாகவும் அறிவுறுத்தியுள்ளது.

நன்றி: PIC 


 

 

வயோதிகப் பெண்மணியிடம் வீரம்(!?) காட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்

வயோதிகப் பெண்மணியிடம் வீரம்(!?) காட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்

 

நப்லஸ் - கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.12.2009) அதிகாலையில் நப்லஸ் நகரில் திடீர் தாக்குதலொன்றை மேற்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, 65 வயதான உம்மு பாக்கிர் என்ற பெண்மணியின் வீட்டுக்குள் பலவந்தமாகப் புகுந்து அவரைக் கைதுசெய்துள்ளதாக கைதிகள் தொடர்பான கற்கை மற்றும் மனித உரிமைகளுக்கான அஹ்ரார் மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 

அஹ்ரார் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உம்மு பாக்கிர் எனும் வயோதிகப் பெண்மணியின் ஐந்து மகன்கள் ஏற்கெனவே இஸ்ரேலிய சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு, கடந்த மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அவருடைய மருமகள் நில்லி அல் ஸஃபாதியையும் இந்த மாதத் தொடக்கத்தில் அவரது எஞ்சியிருந்த ஒரே மகன் உமர் மற்றும் பேரன் பாக்கிர் பாக்கிர் (வயது 19) ஆகிய இருவரையும் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

அஹ்ரார் மையத்தின் பணிப்பாளர் ஃபுவாட் அல் ஹஃப்ஷ் இதுபற்றித் தகவல் அளிக்கையில், இஸ்ரேலின் பெட்டாஹ் திக்வா தடுப்புக்காவல் நிலையத்தில் தற்போது அடைத்துவைக்கப்பட்டுள்ள உம்மு பாக்கிர் (வயது 65) பலஸ்தீன் கைதிகளிலேயே மிகவும் வயது முதிர்ந்தவர் என்றும், அவருடைய மூத்த மகன் பாக்கிர், மருமகள் நில்லியின் கண்பார்வையற்ற கணவன் ஆகியோரும் இதே தடுப்புக்காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.  

 

கொஞ்சம்கூட மனிதாபிமானமின்றி, மகன்களுக்கு உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் துன்புற்றுக்கொண்டிருக்கும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியை இப்படிக் கடத்திச் சென்று தடுப்புக் காவலில் வைத்திருக்கும் மிக இழிவான செயற்பாடானது அதன் மிலேச்சத்தனமான சுயரூபத்தை எடுத்துக்காட்டப் போதுமானதாகும் என்று கடிந்துரைத்த ஃபுவாட் அல் ஹஃப்ஷ், உம்மு பாக்கிரை உடனடியாக விடுவிப்பது தொடர்பில் விரைந்து செயற்படுமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளார். 

திடீர் சோதனை என்ற போர்வையில் தொடர் கைதுகள்

திடீர் சோதனை என்ற போர்வையில் தொடர் கைதுகள்

 

இதே தினத்தில் அல் ஹலீல் நகரத்தில் திடீர் சோதனை என்ற போர்வையில் களமிறங்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை பலஸ்தீன் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்து அவரது வீட்டிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துள்ளது.

 

அவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞரின் பெயர் அக்ரம் அல் ஹத்தாத் என்பதாகவும் அவரது வீட்டிலிருந்த நகைகளே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால்  திருடப்பட்டுள்ளன என்றும் உள்ளூர் வட்டாரங்கள் பலஸ்தீன் தகவல் மையத்திடம் தகவல் தெரிவித்துள்ளன.

நன்றி: PIC




 

 

காஸா – காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின்போது காஸா சிறுவர்கள் மிகக்

காஸா சமூக மனநல நிகழ்ச்சித் திட்டம்

காஸா சமூக மனநல நிகழ்ச்சித் திட்டம்

கடுமையாகப் பாதிக்கப்பட்டு இன்றுவரை சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு மேலதிகமாக, உலகின் ஏனைய சிறுவர்கள் அனுபவிப்பதுபோல் காஸா சிறுவர்களுக்கும் தமது குழந்தைப் பருவத்துக்குரிய இயல்பான குதூகல வாழ்க்கைக்கு உத்தரவாதமளிப்பதன் மூலமே அவர்களுக்கு உரிய நியாயம் வழங்கப்பட முடியும்.  அச்சிறுவர்கள் தமது பாதிப்புகளிலிருந்து மீண்டு முற்றாகக் குணமடைவதற்குள்ள ஒரேவழியும் அதுதான் என்று கடந்த வியாழக்கிழமை (19.11.2009) காஸா சமூக மனநல நிகழ்ச்சித் திட்டம் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்படி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கம் போல் இது பற்றியெல்லாம் வெறுமனே

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்

பேசுவதையும் கோஷமிடுவதையும் விட, காஸா சிறுவர்களின் உரிமைகளைக் காப்பது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.    

மேலும், இஸ்ரேல் பலஸ்தீன் சிறுவர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு வரும் குற்றச்செயல்களை எதிர்க்கும் வகையில் தங்களது காத்திரமான பங்களிப்பினை வழங்குமுகமாக சர்வதேச அமைப்புக்களை ஓரணியில் திரண்டுவருமாறு அழைப்புவிடுத்த மேற்படி அமைப்பு, சுமார் மூன்று வருடங்களாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மனிதாபிமானமற்ற முற்றுகையினால் காஸா பிரதேசம் படிப்படியாக உயிர்ப்பிழந்து கொண்டிருப்பதால், உடனடியாக இந்நிலை நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

அத்துடன், ஆயிரக்கணக்கான பலஸ்தீன் சிறுவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் பொஸ்பரஸ்

இஸ்ரேலின்  மனிதாபிமானமற்ற முற்றுகையால் தமது இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் காஸா சிறுவர்கள்

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற முற்றுகையால் தமது இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் காஸா சிறுவர்கள்

குண்டுத் தாக்குதலாலும் தத்தமது வீடுகளின் மீதான குண்டுத் தாக்குதலின் போதும் ஏற்பட்ட ஆழமான பாதிப்புக்களால் இன்னமும் துன்புற்றுவருவதோடு, பல நூற்றுக்கணக்கான பலஸ்தீன் சிறுவர்கள் இஸ்ரேலியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், ஐ.நா.வின் அறிக்கைப்படி குறைந்தபட்சம் 60 சதவீதமான காஸா சிறுவர்கள் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்து வருகின்றனர் என்றும் மேற்படி அமைப்பு விபரித்திருந்தது.

நன்றி: PIC



 

 

நப்லஸ் - இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை, டொக்டர் மாஜிதா ஃபிதாவின்  நிர்வாகத் தடுப்புக்

டொக்டர் மாஜிதா ஃபிதா

டொக்டர் மாஜிதா ஃபிதா

காவலைத் தொடர்ந்து நீடிக்க உத்தரவிட்டுள்ளது. அவர்மீது இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாததோடு, எவ்வித வழக்கு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், கடந்த மூன்று மாதகாலத்துள் ஐந்தாவது முறையாக இந்த நீடிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. 

 

அந்த அமைப்பு மேலும் குறிப்பிடுகையில், கடந்த ஆகஸ்ட் (06.08.2009) மாதம் மிகச் சொற்பநேர விசாரணையொன்றை மேற்கொண்ட நிலையிலேயே ஃபிதா நிர்வாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

டொக்டர் ஃபிதா நப்லஸ் மாநகரசபை உறுப்பினர்களுள் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை, சில தினங்களுக்கு முன்பு 1948 இல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன்

பலஸ்தீன் தொழிலாளர்களைக் கைதுசெய்யும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை

பலஸ்தீன் தொழிலாளர்களைக் கைதுசெய்யும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை

நிலப்பிரதேசத்தில் 'அனுமதியின்றி உட்புகுந்தார்கள்' என்ற பெயரில் மேற்குக் கரையைச் சேர்ந்த 132 பலஸ்தீன் தொழிலாளர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் திடீரெனச்  சுற்றிவளைக்கப்பட்டனர்.

 'மேற்குக் கரையைச் சேர்ந்த பலஸ்தீன் தொழிலாளர்களுக்கு உதவிகளையும் இருப்பிட வசதிகளையும் அளித்தார்கள்' என்ற குற்றச்சாட்டின் பேரில், 1948 இல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் ஆறு பலஸ்தீனர்கள் ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

மாதாந்தம் சராசரியாக 800 – 1000 பலஸ்தீன் தொழிலாளர்களைக் கைதுசெய்துவரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ், தமது கைது நடவடிக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்ட மத்திய பலஸ்தீனை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளது.

நன்றி: PIC


 



 

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் - ஜெரூசலவாசிகள், வெளிநாட்டு சமாதானச் செயற்பாட்டாளர்கள்
பலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துத் தகர்க்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை

பலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துத் தகர்க்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை

உட்பட  நூற்றுக்கணக்கான மக்கள் புனித நகரில் உள்ள பலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துத் தகர்க்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் 'அழிப்புக் கொள்கை'க்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் பேரணியொன்றை நடாத்தினர்.  

செய்க் ஜர்ராஹ் பிரதேசத்திலிருந்த தமது வீடுகளை இழந்து   தவிக்கும் ஃகாவி, ஹனூன் குடும்பத்தினர்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்குமுகமாகவே கடந்த வெள்ளிக்கிழமை (20.11.2009) இந்தப் பேரணி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

செய்க் ஜர்ராஹ் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் புனித நகரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கொண்டுவந்து குவிக்கப்படுவதை எதிர்த்தும், இஸ்ரேலிய

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் 'அழிப்புக் கொள்கை

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் 'அழிப்புக் கொள்கை

ஆக்கிரமிப்பு அதிகார சபையின் அழிப்புவேலைகளை நிறுத்துமாறு கோரியும், புனித நகரில் வாழையடி வாழையாக வாழ்ந்துவரும் மண்ணின் மைந்தர்களை பலவந்தமாக வெளியேற்றி, அவர்களை இடப்பெயர்வுக்கு நிர்ப்பந்திப்பதைக் கண்டித்தும் பதாதைகளை ஏந்திச் சென்றனர்.      

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் பலவந்தமான யூதக் குடியேற்றத் திட்டத்திற்கமைய, பலஸ்தீனக் குடும்பங்களை தமது வீடுகளிலிருந்து பலவந்தமாய் வெளியேற்றுவதை இடைநிறுத்துமாறு கோரியும் யூதக் குடியேற்றவாசிகள் ஃகாவி, ஹனூன் குடும்பத்தினரை அவரவர் வீடுகளிலிருந்து வெளியேற்றியதைக் கண்டித்து அவர்களுக்கு உடனடியாக  உரிய நிவாரணம் பெற்றுத் தருமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதேவேளை, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் 'அழிப்புக் கொள்கை'யின் இறுதிக்கட்டம் புனித பைத்துல் முகத்திஸ் பள்ளிவாயிலை இடித்துத் தகர்ப்பதாகவே அமையும் என்றும், அரபு-முஸ்லிம் நாடுகளின் நீண்ட மௌனத்தை இஸ்ரேல் தனக்குச் சாதகமானதாகத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளது என்றும் ஹமாஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஸமீரா அல் ஹலைக்கா அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (20.11.2009) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரபு-முஸ்லிம் நாடுகளை அடக்கியொடுக்கி மேலாதிக்கம் செலுத்த

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் இறுதி இலக்கு அல்-அக்ஸாவை இடிப்பதே!

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் இறுதி இலக்கு அல்-அக்ஸாவை இடிப்பதே!

முனையும் 'மரண தேசமான' இஸ்ரேல், தனது திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீவிரமான எதிர்ப்புகள் எவையும் கிளம்பாததால் ஜெரூசல நகரில் அது தனது இலக்கினை அடைந்துகொள்ளும் கடைசிக் கட்டத்தை அண்மித்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, இது தொடர்பில் இதுவரை கைக்கொண்ட மௌனத்தைக் கலைத்து முழு அரபு-முஸ்லிம் உலகும் ஒன்றிணைந்து குரலெழுப்ப முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நன்றி: PIC



 







 

காஸா – 'கோல்ட்ஸ்டோனின் அறிக்கையைத் தொடர்ந்து, 'தம்மைப் பற்றி சர்வதேச சமூகம்

ஹமாஸ் பாராளுமன்றப் பேச்சாளர் கலாநிதி ஸலாஹ் அல்-பர்தாவில்

ஹமாஸ் பாராளுமன்றப் பேச்சாளர் கலாநிதி ஸலாஹ் அல்-பர்தாவில்

எத்தகைய எதிர்வினையைக் கொண்டுள்ளது' என்பதைப் பரிசீலிக்குமுகமாகவே காஸா மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல் நடவடிக்கைகள் அமைந்துள்ளன' என்று ஹமாஸ் பாராளுமன்றப் பேச்சாளர் கலாநிதி ஸலாஹ் அல்-பர்தாவில் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழைமை (22.11.2009) ஊடக அறிக்கையொன்றில் அவர் இதுபற்றிக் குறிப்பிடுகையில், இஸ்ரேல் பல புதிய அக்கிரமங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருப்பதாலேயே சமீபத்தில் மீண்டும் இவ்வாறான அத்துமீறிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதன் மூலம், எதிர்காலத்தில் பலஸ்தீன் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளவிருக்கும் மற்றுமோர் அத்துமீறிய தாக்குதலின்போது உலகநாடுகள் அதனை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதைப் பரிசீலித்துப் பார்ப்பதே அதன் நோக்கமாகும்  குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலைப் பொறுத்தவரையில் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடுவதுதான் அதன் பொதுவான

"எம் பணி கொலைசெய்து குவிப்பதே!"

"எம் பணி கொலைசெய்து குவிப்பதே!"

இயல்பு என்பதால், காஸா மீது அது அண்மையில் மேற்கொண்ட அட்டூழியச் செயல்களை நியாயப்படுத்த வேண்டும் என்ற எந்தத் தேவையும் அதற்கில்லை என்று கண்டித்துப் பேசிய அவர், இனிமேலும் இவ்வாறான எந்தவோர் அக்கிரமச் செயல் தொடர்பாகவும் அரபுலகம் கண்டுகொள்ளாமல் இருக்குமா என்பதைப் பரிசீலிக்குமுகமாகவுமே இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை முன்னோட்டமாய் நடத்திப் பார்க்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேலின் இத்தகைய அடாவடித்தனங்களை முறியடிப்பதற்குள்ள மிகச் சிறந்த வழி பலஸ்தீனர்களின் ஐக்கியமே என்று தெரிவித்த ஹமாஸ் பாராளுமன்ற உறுப்பினரான பர்தாவில், பலஸ்தீனின் ஸ்திரப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட விடுதலைப் போராட்டத்தின் மூலம் மீள்

காஸாமீது குண்டுமழை பொழியும் இஸ்ரேலியப் போர் விமானம்

காஸாமீது குண்டுமழை பொழியும் இஸ்ரேலியப் போர் விமானம்

ஒருங்கிணைப்பைக் கட்டியெழுப்ப அணிதிரளுமாறு பலஸ்தீனின் சகல தரப்பினரையும் நோக்கி அழைப்புவிடுத்தார்.

நன்றி: PIC







ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் - 'அனுமதியற்ற கட்டடங்களைத் தகர்த்தல்' என்ற போர்வையில்
 
பலஸ்தீனர்களின் வீடுகளைத்  தகர்க்கும் இஸ்ரேலிய அடாவடிக் கொள்கை

பலஸ்தீனர்களின் வீடுகளைத் தகர்க்கும் இஸ்ரேலிய அடாவடிக் கொள்கை

ஜெரூசல நகரிலுள்ள பலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துத் தகர்க்கும் இஸ்ரேலின் செயற்பாட்டினால் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் தமது வாழிடங்களை இழந்து இடப்பெயர்வுக்குள்ளாகும் அபாயநிலை தோன்றியுள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.    

மேற்படி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனித ஜெரூசல நகரில் உள்ள இஸ்ரேலிய முனிஸிபல் கவன்ஸில் ஸில்வான் பகுதியைச் சுற்றியுள்ள பலஸ்தீனர்களின் வீடுகளைத் தகர்க்குமுகமாக 17 கட்டடத் தகர்ப்பு உத்தரவுகளை அண்மையில் வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அண்மைக் காலமாக சுமார் 90 பலஸ்தீனர்களின் வீடுகள் தகர்ப்பு உத்தரவுகளைப் பெற்றிருப்பதாகவும் அதனால் அவற்றின் உரிமையாளர்கள் தமது வாழிடங்களை இழந்து இடப்பெயர்வுக்கு ஆளாகும் அவலநிலை தோன்றியிருப்பதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகையில், இஸ்ரேல் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் கிழக்கு images_news_2009_08_20_demolish-policy-1_300_0ஜெரூசலத்தில் சுமார் 75 பலஸ்தீனக் கட்டடங்களைத் தகர்த்ததன் மூலம் 131 குழந்தைகள் உட்பட 269 பலஸ்தீனர்கள் தத்தமது இருப்பிடங்களை இழந்து இடம்பெயர நேர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

நன்றி : PIC


 

(15 Oct.,Chicago,USA) சிக்காகோ பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த சிறப்பு விரிவுரையாளரான இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மேர்ட் மாணவர்களின் எதிர்ப்புக்கு உள்ளானார். விரிவுரையாற்றிய மண்டபத்திற்கு வெளியே சுமார் 150 மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மண்டபத்தினுள்ளேயும் ஒல்மேர்ட்டை பேச விடாமல் தடுத்து குழப்பம் விளைவித்தனர். "ஒல்மேர்ட் போர்க் குற்றவாளி" என்ற கூக்குரல்கள் மண்டபத்தின் நாலாபக்கத்தில் இருந்தும் கேட்டன. காஸா இராணுவ நடவடிக்கையில் கொள்ளப்பட்ட பாலஸ்தீன சிறுவர்களின் பெயர்கள் சத்தமாக வாசிக்கப்பட்டன. ஒல்மேர்ட்டின் ஆட்சிக்காலத்தில் தான் காஸா பல்கலைக்கழகம் இஸ்ரேலிய படையினரால் தகர்க்கப்பட்டது. அப்பேர்ப்பட்ட கிரிமினலை சிக்காகோ பல்கலைக்கழகம் விரிவுரையாற்ற அழைத்த செயலை கண்டித்தனர். ஒல்மேர்ட் பதவியில் இருந்த போது தான், லெபனான், காஸா மீதான இராணுவ நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை இங்கே நினைவுகூரத்தக்க்கது.
மண்டபத்தினுள் ஊடகவியலாளர்கள் கூட கமெராக்கள் கொண்டு வரக்கூடாது என்ற தடையுத்தரவு இருந்தது. இருப்பினும் மாணவ ஆர்வலர்கள் இரகசியமாக எடுத்துச் சென்ற வீடியோ கருவி மூலம், அங்கே நடந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளனர்.



கடந்த டிசம்பரில் இஸ்ரேல் பாலஸ்தீன் மீது அநியாயமாக நடத்திய ஆக்கிரமிப்பு போரில் பல பாலஸ்தீன அப்பாவி பொது மக்களை வேண்டுமென்றே கொன்றுள்ளனர் என்றும் பலரை உயிருடன் புதைத்துள்ளனர் என்றும் பாலஸ்தீன மனித உரிமை ஆர்வலர் நஷாத் அல் வாஹிதி தெரிவித்தார்.


வாஹிதி அவருடைய அறிக்கையில், "பாலஸ்தீனிய பொதுமக்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கைதிகளாக பிடித்து அவர்களை கொன்று குவித்துள்ளனர்" என்று கூறினார்.


அவர் மேலும் கூறியதாவது, "காசாவின் கிழக்கு பகுதியில் உள்ள அல் ஜைத்தூன் பகுதியை ஆக்கிரமித்த இஸ்ரேலிய படைகள் காயம் பட்ட பல பாலஸ்தீன பொதுமக்களை உயிருடன் புதைத்துள்ளனர்.


மேலும் , காசா மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதலிற்கு பிறகு பல பாலஸ்தீன பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களின் நிலை என்ன என்பது இன்று வரை தெரியாமல் உள்ளது என்று கூறினார்.


இவர்கள் கொல்லப்பட்டுவிட்டனரா இல்லை இஸ்ரேலிய ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனரா என்று தெரியவில்லை.
நன்றிPalestine Info.
Related Posts with Thumbnails
உதயம்