_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

மே 2-ம் தேதி. அதிகாலை நேரம். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து இரண்டு மணிநேர பயண தூரத்தில் உள்ள அபோதாபாத் நகரத்தில் இருக்கும் காக்கூல் இராணுவ பயிற்சி மையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் அந்த பெரிய கட்டிடத்தை நான்கு உலங்கு வானூர்தியில் வந்த 79 அமெரிக்க சீல்(seals) படையினர் தாக்குகின்றனர். நாற்பது நிமிடங்கள் நீடித்ததாகச் சொல்லப்படும் அந்த சண்டையின் இறுதியில் தமது இலக்கைத் தாக்கியழித்து விட்டு அமெரிக்க வீரர்கள் 'வெற்றியுடன்' திரும்புகின்றனர்.

அதற்குச் சற்று நேரத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் பாரக் ஒபாமா, அமெரிக்கர்களுக்கு நீதி கிடைத்து விட்டது என்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக வலை வீசித் தேடி வந்த உலகின் நம்பர் ஒன் தீவிரவாதியான ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் அபோதாபாத்தில் நடந்த சண்டையில் கொன்று விட்டனர் என்று தெரிவிக்கிறார். அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்ற பயங்கரவாதிக்கான நீதியை வழங்கி விட்டதாகவும், ஆனாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான தமது போர் தொடரும் என்றும் அறிவிக்கிறார்.

அதைத் தொடர்ந்து இந்த விசயம் உலகெங்கும் உள்ள ஊடகங்களில் ஒரு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. உலகத்தின் நாகரீக சமூகத்திற்கே ஆகப் பெரிய சவாலாக விளங்கிய படுபயங்கரமான தீவிரவாதி கொல்லப்பட்டதை உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ ஊடகங்கள் கொண்டாடின. ஆனால், இவர்களுக்கும் முன்னதாக இந்த 'நரகாசுரவதத்தைக்' கொண்டாடத் துவங்கியது அமெரிக்கர்கள் தான். செய்தி வெளியானதும் வெள்ளை மாளிகையைச் சூழ்ந்து கொண்ட நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்துள்ளனர். தேசிய வெறி முழக்கங்களைத் தெரிவித்து மகிழ்ந்துள்ளனர்.

இன்னொரு பக்கம் பாகிஸ்தானில் திரளான மக்கள் ஒசாமா கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்க எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியுள்ளனர். புனிதப் போராளியான ஒசாமா பின்லேடனுக்கு சொர்கத்தில் இடம் நிச்சயம் என்று சொல்கின்றனர். வசதியான வீட்டுப் பிள்ளையான ஒசாமா, இசுலாத்தையும் இசுலாமியர்களையும் காப்பதற்காகவே தனது சுகவாழ்க்கையைத் தியாகம் செய்து காடு மலையெல்லாம் அலைந்து திரிந்தார் என்று இவர்கள் நம்புகிறார்கள். அமெரிக்கா என்றாலே இசுலாமிய எதிர்ப்பு என்பது பட்டவர்த்தனமாக நடந்து வரும் வேளையில் ஒரு சராசரி முசுலீம் கூட பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து வருந்துவார் என்பதில் ஆச்சரியமில்லை. அதைத் தவறாக எண்ணவேண்டிய அவசியமும் இல்லை.

பொதுவில் அமெரிக்காவின் இந்த சாகச நடவடிக்கையைப் போற்றிப் புகழும் ஊடகங்களை விடுத்துப் பார்த்தால், வெகு சில அமெரிக்க எதிர்ப்பு ஊடகங்களிலோ இது மொத்தமும் பெரிய மோசடியென்கிறார்கள். ஒசாமா பின்லேடன் ஏற்கனவே மரணமடைந்து விட்டாரென்றும், இப்போது அமெரிக்கா சொல்வதே பச்சையான பொய் என்றும் சொல்கின்றனர். சர்வதேசப் பெருமந்தம் என்கிற பெரும்  பொருளாதாரப் புதைகுழியிலும் ஆப்கான் போர் என்கிற இராணுவரீதியிலான புதைகுழியிலும் மீளமுடியாமல் சிக்கியிருக்கும் அமெரிக்கா, அதிலிருந்து  மக்களின் கவனத்தை திசை திருப்பவே இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், எதிர்வரும் தேர்தலுக்குள் சரிந்து போன தனது செல்வாக்கை நிமிர்த்தும் முகமாகவே பராக் ஒபாமா இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஒசாமா பின்லேடனை அமெரிக்கத் தயாரிப்பு என்று ஒப்புக் கொள்ளும் சிலரும் கூட, அவரால் அமெரிக்கா படுபயங்கரமான பாதிப்புக்குள்ளாகி விட்டதைப் போன்றும், அவர் அமெரிக்காவுக்கு தீர்க்க முடியாத ஒரு பெரும் சவாலாக விளங்கினார் என்றும் இப்போது படாதபாடெல்லாம் பட்டு அமெரிக்கா அவரைத் தீர்த்துக் கட்டியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இந்த அம்சங்களை நாம் தனித்தனியே பிரித்துப் பார்த்து பொருள் கொள்ள முடியாது. ஒசாமா யாருக்காக வாழ்ந்தார் என்பதைப் புரிந்து கொள்வதில் இருந்து தான் அவர் யாருக்காக செத்தார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். யாருக்காக செத்தார் என்பதை விளங்கிக் கொள்ளும் போது தான் எதற்காகச் சாக வேண்டும் என்பது தெரியவரும். இந்தப் பரிசீலனைகளின் நீட்சியாக எப்போது செத்தார் என்கிற ஆராய்ச்சியின் தேவையும் தேவையின்மையும் அதன் மெய்யான பொருளில் நமக்கு விளங்கும்.

ஒசாமா இறந்தாலும் ஆயிரம் பொன், இருந்தாலும் ஆயிரம் பொன்!

ஒப்பீட்டளவில் ஒசாமாவைக் காட்டிலும் உள்நாட்டு மக்களிடையே ஓரளவு செல்வாக்கு பெற்றிருந்த சதாம் உசேன் பிடிபட்டதையும், விசாரணை என்கிற பெயரில் அவர் அவமானப்படுத்தப்பட்டதையும், பின்னர் அவர் அநீதியான முறையில் கொல்லப்பட்டதையும் வீடியோக்களாக 'கசிய' விட்டு ஈராக்கியர்களிடையே பயபீதியை ஏற்படுத்திய அமெரிக்கா, ஒசாமா கொல்லப்பட்டதும் அவரது உடலை வெளியே காட்டாமல் அவசர அவசரமாக கடலில் வீசியெறிந்து விட்டதாகச் சொல்கிறது.

ஒசாமாவைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் ஜெரோனிமா பற்றிய தகவல்களைக் கூட அமெரிக்க சி.ஐ.ஏவின் உயரதிகாரிகளும் வெள்ளை மாளிகளை அதிகாரிகளும் முன்னுக்குப் பின் முரணாகத் தான் சொல்லி வருகிறார்கள். ஒசாமாவோடு அவரது மனைவியும் மகனும் கொல்லப்பட்டார்கள் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள் – பின்னர் இல்லையில்லை அது அவரது கூட்டாளியின் மனைவியும் மகனும்  என்று மாற்றினார்கள். அடுத்து, ஒசாமாவே துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சண்டையிட்டார் என்றார்கள். ஒசாமாவின் உடல் நலிவைப் பற்றி ஊடகங்கள் எழுதத் துவங்கிய பின் இல்லையில்லை அவர் கைது நடவடிக்கையை எதிர்க்கும் விதமான செய்கைகளைச் செய்தார், எனவே தற்காப்புக்காக கொன்றோம் என்கிறார்கள்.

இப்படி மாற்றி மாற்றி அமெரிக்கர்கள் உளறிக் கொட்டுவதைச் சுட்டிக் காட்டும் சிலர், இது மொத்தமுமே ஒரு நாடகம் என்கிறார்கள். ஒசாமா 2001 டிசம்பரிலேயே கொல்லப்பட்டு விட்டதாகவும், தமது 'தீவிரவாதத்துக்கு எதிரான'  போருக்கு மக்களிடையே ஒரு ஆதரவு தளத்தை உண்டாக்கவும், ஒசாமாவை மோசமான எதிரியாகச் சித்தரித்து அமெரிக்கர்களிடையே போருக்கு ஆதரவானதொரு பொதுக் கருத்தை காட்டமைக்கவே இத்தனை நாளும் அதை மறைத்தார்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள்.

இரட்டை கோபுரத் தகர்ப்புக்குப் பின் பகிரங்கமாக ஒசாமா வெளியே தலைகாட்டாமல் இருந்ததையும் அதன் பின் வெகு சில சந்தர்பங்களில் வெளியான அவரது வீடியோக்களின் நம்பகத்தன்மை சுயேச்சையான ஆய்வுகளில் (ஃபோரன்சிக் ஆய்வு) கேள்விக்குள்ளாக்கப் பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டும் இவர்கள், இப்போது ஆப்கானில் இருந்து வெளியேற முடியாமல் அமெரிக்கா தவிப்பதாகவும், போருக்கான செலவினங்கள் அதிகரித்து அமெரிக்கப் பொருளாதாரத்தின் கழுத்தை நெறிப்பதாகவும், இதனால் ஆப்கான் போரை ஒரு கவுரவமான வெற்றியாக சித்தரிக்கும் முகமாகவே இப்போது ஒசாமா கொல்லப்பட்ட நாடகம் நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இது இன்னொரு பக்கத்தில் ஒபாமாவின் சரிந்து போன செல்வாக்கை உயர்த்தவும் பயன்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

மேற்கண்ட வாதங்கள் முழுமையும் பொய் என்று ஒதுக்கிவிட முடியாது. ஆனால், ஒரு அடிப்படையான அம்சத்தை இவர்கள் காணத் தவறுகிறார்கள். போரிலிருந்து பின்வாங்குவது தான் அமெரிக்காவின் நோக்கம் என்றால், இப்போது லிபியாவின் மேல் ஏன் போர் தொடங்க வேண்டும்? அடுத்து சிரியாவின் மேல் ஏன் குறிவைக்க வேண்டும்? நிதர்சனம் என்னவென்றால்,ஏகாதிபத்தியம் போர்களில் இருந்து விலகுவதன் மூலம் தனது நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்ள விளைவதில்லை – அது மேலும் மேலும் போர்களில் ஈடுபடுவதன் மூலமே தனது நெருக்கடிக்கான தீர்வை அடைய விரும்புகிறது. அதுதான் ஏகாதிபத்தியங்கள் உயிர்வாழ்தலின் ரகசியம்.

அதே நேரம் ஒசாமா கொலை பற்றி அமெரிக்கர்கள் மாற்றி மாற்றி முரண்பட்ட தகவல்களை அளிப்பதையும், 2007-க்குப் பிறகு ஒசாமா வீடியோ / ஆடியோ உள்ளிட்ட எந்த ரூபத்திலும் தலைகாட்டாத எதார்த்த உண்மையையும், இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின் நடந்ததாகச் சொல்லப்படும் 'இசுலாமிய தீவிரவாத' தாக்குதல்கள் எதையும் ஒசாமாவின் நேரடிக் கட்டளையின் பேரில் நடக்கவில்லை என்று ஏகாதிபத்தியவாதிகளே சொல்வதையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

ஆக, உண்மை என்பது இந்த இரண்டுக்கும் இடையில் தான் இருக்கிறது.

ஒசாமா 2001-ல் இறந்தாரா – இல்லை 2011-ல் இறந்தாரா என்பதைப் பற்றிய பரிசீலனைக்குள் போவதற்கு முன், ஒசாமா பின்லேடன் என்கிற பெயர், அதைச் சுற்றி கவனமாக கட்டப்பட்ட பிம்பம், அந்த பிம்பத்தைப் பற்றி அமெரிக்க மற்றும் உலக மக்களின் பொதுக்கருத்தில் முதலாளித்துவ ஊடகங்களால் தொடர்ச்சியாகத் திணிக்கப்பட்ட பயபீதி, இந்த பயபீதியினால் ஏற்பட்ட விளைவுகள் என்ன – அது யாருடைய நலனுக்கு சேவை புரிந்துள்ளது என்பதைக் குறித்து நாம் புரிந்து கொண்டால் தான் முந்தைய கேள்விக்கான பதில் நமக்கு விளங்கும்.

அமெரிக்க அரசின் இயக்கமும் அதன் செயல்பாடுகளும் – அந்தச் செயல்பாடுகளினால் விளையும் நன்மைகளும் முழுக்க முழுக்க பன்னாட்டு முதலாளிகளின் நலன் சார்ந்த ஒன்று. போர் என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம்? போர் என்றால் அப்பாவி மக்கள் சாவார்கள். ஒன்றுமறியாத குழந்தைகள் அநியாயமாகச் சாவார்கள். போர் என்றால் ஒரு சமூகத்தின் சர்வநாசம். அதன் சமூகப் பொருளாதாரக் கட்டமைவின் பேரழிவு. இப்படித்தான் போரைப் பற்றி ஓரளவுக்கு விவரம் புரிந்தவர்கள் கூடப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சரிதானே?

ஆனால், முதலாளிகளைப் பொருத்தளவில் போர் என்பது ஒரு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம். போர் என்றால் ஆயுத விற்பனை – ஆயுத வியாபாரிகள் கொழிப்பார்கள். போரின் அழிவு என்றால் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு – கட்டுமானக் கம்பெனிகளின் கொழிப்பு. போரின் இறுதியில் தோற்றுப் போகும் நாட்டின் வளங்களின் மறுபங்கீடு. தமது பொருட்களுக்கான சந்தை. இதையெல்லாம் கடந்து வெல்லப்பட்ட நாட்டின் மீது வென்ற நாட்டின் மேலாதிக்கம்.

ஒசாமா பின்லேடன் என்று ஒருவர் இல்லாமல் போய் – இரட்டை கோபுரம் தகர்க்கப்படாமல் இருந்திருந்தாலும் கூட ஆப்கான் போர் என்பது சர்வ நிச்சயமாய் நடந்திருக்கும். அதற்கு இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பதையும் மனிதகுலத்துக்கே சவால் விடுக்கும் 'படுபயங்கர' சாத்தானாகச் சித்தரிக்கப்படும் ஒசாமா பின்லேடனையும் கடந்து பல்வேறு தேவைகளும் காரணங்களும் அமெரிக்காவிடம் இருந்தன. அந்தக் காரணங்கள் என்னவென்பதைப் பற்றி நாம் விரிவாக விளக்கும் முன்,  ஈராக் போருக்கான முக்கியமான காரணமாக அமெரிக்காவால் சொல்லப்பட்ட பேரழிவிற்கான ஆயுதங்கள் என்பது ஒருபோதும் ஈராக்கில் கண்டெடுக்கப்பட்டதில்லை என்பதை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பும், அல்-காய்தா, தாலிபான் உருவாக்கமும்: ஒரு சுருக்கமான வரலாறு!

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளாயிருந்த மத்திய ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் நிலங்களின் அடியில் அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உஸ்பெகிஸ்தானில் கொட்டிக் கிடக்கும் தங்கம், தஜிகிஸ்தானில் புதைந்து கிடக்கும் ஏராளமான வெள்ளி, கஜாக்கிஸ்தானின் யுரேனிய இருப்பு ஆகிவற்றைக் கடந்து, இந்நாடுகளின் நிலத்தினடியில் ஏராளமான இயற்கை எரிவாயு ரிசர்வும் உள்ளது. கஜாக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், அசர்பெய்ஜான் ஆகிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயு நிலத்தினடியில் இருக்கிறது.

கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கே துர்க்மெனிஸ்தான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான் மற்றும் தாஜிகிஸ்தான், வட கிழக்கே சீனாவின் ஜின்சியாங் மாநிலம் ஆகியவற்றைத் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கும் ஆப்கான் போர்தந்திர ரீதியில் ஒரு புவியியல் கேந்திரமான இடத்தில் அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின் எரிவாயுவை ஐரோப்பியச் சந்தைக்குக் கடத்திச் செல்ல வேண்டுமானால் ஒன்று ஈரான் வழியே கொண்டு சென்றாக வேண்டும் அல்லது ஜார்ஜியா வழியே கொண்டு சென்றாக வேண்டும்.

ஈரான் அமெரிக்காவுக்குப் படியாத நாடு என்பதைக் கடந்து, ஈரான் வழியே துருக்கியை குழாய் மூலம் இணைப்பது என்பது துருக்கிக்கும் ஈரானுக்கும் பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவானதொரு நட்புறவு தோன்றி விட அடிப்படையாய் அமைந்து விடும். ஈரானைத் தனிமைப்படுத்துவதைத் தனது அடிப்படையான மத்தியகிழக்குக் கொள்கையாகக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்த கதையாகி விடும்.

ஜார்ஜியா வழியே குழாய் அமைக்கலாம் என்றால் அங்கே ஆயுந்தாங்கிய மாஃபியா கும்பலின் தொல்லை. அதுவுமின்றி ஜார்ஜியாவின் தெற்கு எல்லைப் பிராந்தியமான ஒஸ்ஸேடியாவை ரசியா சொந்தம் கொண்டாடுகிறது. இவ்விரு நாடுகளுக்குள்ளும் இருக்கும் எல்லைத் தகறாரின் காரணமாக ரசியா அவ்வப்போது ஜார்ஜியாவின் மேல் ராணுவத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ஜார்ஜியாவை நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைப்பதையும் ரசியா எதிர்த்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ரசியாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையாகத் தோற்றமளித்தாலும், ஜார்ஜியாவின் ஊடாக மேற்கு நாடுகள் எண்ணைக் குழாய் அமைத்து விடக் கூடாது என்பதில் ரசியா குறிப்பாக இருப்பது புரியும்.

இவ்விரு பாதைகளும் அடைபட்டதும் அமெரிக்காவின் முன் இருக்கும் எஞ்சிய வாய்ப்பு ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக்கடல் என்கிற குழாய்ப் பாதை தான். மேலும் இது  மேலே சொல்லப்பட்ட இரண்டு பாதைகளையும் விட குறைந்த செலவு பிடிக்கக் கூடியது. அரபிக்கடலில் இருந்து ஐரோப்பியச் சந்தைக்கும் இந்தியச் சந்தைக்கும் கப்பல் மூலம் எண்ணையை ஏற்றுமதி செய்வது சுலபம். இறுதியாக அமெரிக்காவின் போட்டியாளர்களாக உருவெடுத்து வரும் ரசியா, சீனா இரண்டு நாடுகளையும் கண்காணிப்பதற்கும், பயமுறுத்துவதற்கும், தேவையான இராணுவத் தளங்களை ஆப்கானில் வைத்திருப்பதும் முக்கியமானது.

ஆப்கானின் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால் தான் பனிப்போர் காலத்திலேயே சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்திருந்த சோவியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆப்கானைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் எழுபதுகளின் இறுதியில் ரசியாவின் கை ஓங்கியிருந்தது. அப்போது அங்கிருந்து ரசியாவை விரட்ட அமெரிக்கா பெற்றெடுத்த சொந்தப் பிள்ளைகள் தான் தாலிபானும் அல்-காய்தாவும்.

நாத்திகர்களான கம்யூனிஸ்ட்டுகளை இசுலாமிய மண்ணான ஆப்கானில் இருந்து விரட்டுவதற்காகப் பல்வேறு இசுலாமிய நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பாகிஸ்தானில் குவித்தது அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அங்குள்ள மதரஸாக்களில் வைத்து அவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் அளித்தது பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. இதற்கு தேவையான நிதி உதவியை அமெரிக்க அடிமைகளான சவுதி ஷேக்குகள் அளித்தனர். இப்படியாகத் தான் அரபு நாடுகளில் கட்டுமானத் தொழிலின் மூலம் பெரும் செல்வம் ஈட்டி சவூதி அரச குடும்பத்துக்கு நிகரான பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமா பின்லேடன் ஆப்கான் வந்திறங்கினார்.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமாவே சுகவாழ்க்கையை விடுத்து நாத்திகர்களை எதிர்த்து ஜிஹாத்தில் குதித்துள்ளார் என்கிற பிரச்சாரம் ஏழை முசுலீம்களிடம் சிறப்பாக எடுபடும் என்பது அமெரிக்காவின் கணக்கு. அமெரிக்காவின் அந்தக் கணக்கு தப்பவில்லை; ஆனால், அவர்கள் கணக்குப் பண்ணிப் பார்க்க வேண்டும் எண்ணியிராத எதிர்பாராத ஒரு இலக்கிலிருந்து தான் அடுத்த தாக்குதல் இறங்கியது. கம்யூனிச 'அபாயத்தைக்' களையும் நோக்கத்திற்காகப் அமெரிக்கா பெற்றுப் போட்ட தாலிபானும், அல்-காய்தாவும் தமது பிறவி நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர். எண்பதுகளின் இறுதியில் சோவியத் படைகள் ஆப்கானில் இருந்து பின்வாங்கின.

அல்-காய்தாவுக்கும் ஆப்கான் போரில் பங்கேற்க முஜாஹிதீன்களைத் திரட்டவும் இசுலாமிய நாடுகளின் இளைஞர்களிடையே ஒரு பிரச்சார முழக்கமாக அமெரிக்கா முன்வைத்திருந்த சித்தாந்தமான இசுலாமிய சர்வதேசியம் பூமராங் போல் திருப்பித் தாக்கும் சந்தர்பமும் உடனடியாக வந்து சேர்ந்தது அமெரிக்காவே எதிர்பார்த்திராத ஒரு சுவாரசியமான திருப்பம். ஆப்கான் போர் முடிந்து சவூதி திரும்பிய பின்லேடனை ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பு எதிர்கொள்கிறது.

இவ்விவகாரத்தில் அமெரிக்கத் தலையீட்டை பின்லேடன் எதிர்க்கிறார். ஈராக்கை தனது அல் காய்தாவையும் முஜாஹித்தீன்களையும் வைத்தே எதிர்கொள்ளலாம் என்கிற பின்லேடனின் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. மேலும் சவூதி அரசின் அமெரிக்க விசுவாசமும் சவூதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளும், வரலாற்று ரீதியிலான யூத இசுலாமிய முரண்பாடுகளின் பின்னணியில் பின்லேடனுக்கு இருந்த இசுரேல் எதிர்ப்பும், அதற்கு எண்ணை வார்க்கும் இசுரேலின் பிராந்திய ரவுடித்தனமும், அந்த ரவுடித்தனத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் தாதாத்தனமும் பின்லேடனுக்குள் ஆழமான அமெரிக்க எதிர்ப்புணர்வை  உண்டாக்குகிறது. இது பின்லேடனுக்குள் மட்டுமல்ல மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க அடிமை ஆட்சியாளர்களைத் தவிர்த்த இசுலாமிய மக்கள் அனைவருக்குள்ளும் உருவாகிறது.

என்னதான் அமெரிக்கத் தயாரிப்பாக இருந்தாலும் – அமெரிக்கப்  பாடதிட்டமான இசுலாமிய சர்வதேசியத்தைப் பயின்றிருந்தாலும் பின்லேடன் அதை உணர்வுப்பூர்வமாக பற்றி நின்றிருக்கிறார். இங்கே பின்லேடனிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் பொதுவில் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் அடிப்படையிலேயே வேறு வேறானது. பின்லேடனிடமோ தாலிபானிடமோ வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வு என்பது மக்கள் விடுதலை உரிமை என்கிற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதல்ல – அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தில் இசுலாமை மாற்றீடு செய்ய வேண்டும் – இழந்த தமது மேண்மையை மீட்க வேண்டும் என்கிற நோக்கத்தின் மீது கட்டப்பட்டது. அரபுலகில் மக்களது ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்பது அல் காய்தாவின் கோரிக்கையல்ல. அங்கிருக்கும் ஆட்சியாளர்களைத் துறத்திவிட்டு தூய இசுலாமிய சர்வாதிகாரத்தை நிறுவுவதுதான் அவர்களது நோக்கம்.

அதன் பின் 1996-ல் ஆப்கான் திரும்பும் ஒசாமா, தாலிபான்களின் பராமரிப்பில் தனது அமெரிக்க எதிர்ப்புப் போருக்கு ஆயத்தமாகிறார். தாலிபானின் பச்சையான மனித உரிமை மீறல்கள் மற்றும் காட்டுமிராண்டித் தனமான சட்டங்களின் காரணமாக அமெரிக்காவால் ஆப்கான் அரசை வெளிப்படையாக அங்கீகரிக்க முடியா விட்டாலும் அமெரிக்க அடிவருடிகளான பாகிஸ்தானும் சவூதியும் ஆப்கானை அங்கீகரித்திருந்தன. இவர்கள் மூலம் அமெரிக்கா ஆப்கானுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டிருந்தது. எண்ணை ஒப்பந்தங்களுக்காக தாலிபான்களின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கும் சென்றுள்ளனர்.

வெளிப்படையான அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பின்லேடனின் போரை ஆரம்பத்தில் தாலிபான்கள் தங்கள் சொந்தப் பிரச்சினையாகக் கருதவில்லை. முல்லா ஓமர் 98-ன் மத்தி வரையில் பின்லேடனின் இந்த முடிவை எதிர்த்துள்ளதாக அவரை மூன்று முறை பேட்டி கண்ட பாக்கிஸ்தான் பத்திரிகையாளர் ரஹிமுல்லாஹ் யூஸுஃப்ஸாய் தெரிவிக்கிறார். ஆனால் இந்த முரண்பாடு ஓரளவுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. தூய இசுலாமிய அடிப்படைவாதத்தின் மேல் கட்டப்பட்ட தாலிபான்களும் அவர்களின் முஜாஹித்தீன்களும் ஓரளவுக்கு மேல் அமெரிக்காவோடு உறவாடுவது அவர்களின் அடிப்படையையே அசைத்து விடக்கூடிய அபாயம் கொண்ட விளையாட்டு. தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் ஆப்கானில் இருந்தவாறே பின்லேடன் அமெரிக்கத் தூதரகங்களின் மேல் தொடுத்த தாக்குதல்களை தாலிபான்கள் தடுக்கவில்லை. பின்லேடனின் சர்வதேசிய இசுலாமிய முன்னணியின் செயல்பாட்டையும் முடக்கவில்லை.

இது ஆப்கானை எளிதில் மேய்ந்து விட்டுப் போய்விடலாம் – அதைத் தொடர்ந்து மத்திய ஆசிய எண்ணை வயல்களை சுலபத்தில் வளைத்துப் போட்டு விடலாம் – என்றெல்லாம் நாக்கில் எச்சில் ஊற கணக்குப் போட்டுக் காத்திருந்த அமெரிக்காவுக்கு ஆத்திரத்தைக் கிளப்புகிறது. தொண்ணூறுகளின் இறுதியிலிருந்தே ஆப்கானைத் தாக்கிக் கைப்பற்ற அமெரிக்கா தருணம் பார்த்துக் காத்துக் கிடந்த நிலையில் தான் இரட்டை கோபுரத் தகர்ப்பு நடக்கிறது.

உலக வரலாற்றில் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் இந்தத் தாக்குதலை அல் காய்தா நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த தாக்குதல் நடப்பதை அமெரிக்க அறிந்து தனது அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே  நடக்க அனுமதித்தது என்றெல்லாம் கூட சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ இந்த தாக்குதலை வைத்து அமெரிக்கா அறுவடை செய்த அரசியல் நடவடிக்கைகள்தான் நம்மைப் பொறுத்த வரை முக்கியமானது.

ஆப்கானின் மேலான அமெரிக்க நிலைப்பாடு பற்றியெறியத் தயாரான நிலையில் இருந்த காய்ந்து போன வைக்கோல் போர் என்றால், இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பது அதன் மீது விழுந்த சிறு பொறி. அதன் பின் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான தனது போரைத் துவக்குகிறது. அதுவரை தானே தனது நலனுக்காக ஊட்டி வளர்த்த இசுலாமிய சர்வதேசியத்தையும் முஜாஹிதீன்களையும் இப்போது புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது நலனுக்காகவே வில்லனாகச் சித்தரிக்கத் துவங்கியது  அமெரிக்கா. இப்படித்தான் விடுதலைப் போராளிகள், பயங்கரவாதிகளாக மறு நாமகர்ணம் சூட்டப்பட்டார்கள்.

தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் முதலில் ஆப்கான் மேலும் அதைத் தொடர்ந்து ஈராக் மேலும்  குண்டுகளைப் பொழிந்ததும், அவற்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததையும், அப்போரில் அநியாயமாய்க் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவிகள் பற்றியும் நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டீர்கள் – ஆனால், இதில் நீங்கள் கேள்விப்படாத இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஆப்கான் போருக்காக மட்டும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவிட்டு வருகிறது. இன்றைய நிலையில் ஈராக் மற்றும் ஆப்கான் போர்களுக்காக சுமார் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படும் இத்தொகையானது ஆயுதக் கம்பெனி முதலாளிகளும், கட்டுமானக் கம்பெனி முதலாளிகளுக்கும், எண்ணைக் கம்பெனிகளுக்கும் தான் பாய்ச்சப்படுகின்றன. இது இந்தப் போரின் பொருளாதார முகம்  என்றால், இந்தப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது அதன் இராணுவ முகம்.

ஆக, இசுலாமிய தீவிரவாதம் என்கிற வளர்த்த கடா அமெரிக்கா விரும்பிய திசையில் பாய்ந்த போதும் சரி  – திரும்பி அமெரிக்காவின் மார்பிலேயே பாய்ந்த போதும் சரி; அதன் பலன்கள் என்னவோ அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதன் ஆன்மாவாக இருக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கும் தான்.

இந்தப் போரின் ஒரு இடைக்கட்டமாக இப்போது ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தாலும், அந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதியான 'தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்னமும் ஓயவில்லை' என்பதே நமது அக்கறைக்கும் கவனத்திற்கும் உரியதாகும். கடந்த பத்தாண்டுகளாக போதுமான அளவிற்கு ஒசாமா பின்லேடன் என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டியே அமெரிக்கர்களிடம் பயபீதியை உண்டாக்கி ஒரு பொதுக்கருத்தை கட்டமைத்து போர் நடத்தியாகிவிட்டது. இப்போது எதார்த்தம் சாமானிய  அமெரிக்கர்களைச் சுடும் நேரம் வந்து விட்டது.

இனிமேலும் இந்தப் பூச்சாண்டியைக் காட்டி கிளைமேக்சே இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க பட்ஜெட்டிலும் மக்கள் நலத்திட்டங்களைச் சுருக்கி நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலாளிகளுக்குப் படையலிட்டுக் கொண்டிருக்க முடியாது. அதவாது மக்கள் தொட்டறியத்தக்க ஒரு வெற்றி வேண்டும். ஆக, அமெரிக்கா நடத்தி வரும் மெகா சீரியலில் இப்போதைக்கு ஒரு வில்லனைக் காவு கொடுத்து நேயர்களை கொஞ்சம் மகிழ்ச்சிப் படுத்தியாக வேண்டிய தருணம் வந்துள்ளது – ஒசாமா வதமும் நிகழ்ந்துள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்டதை அறிவித்த பராக் ஒபாமா, அந்த வாக்கியத்தின் இறுதியிலேயே போர் இன்னமும் முடியவில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறார். இனிமேல் வெறுமனே தீவிரவாதத்தை மட்டுமே  எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருப்பது என்பது சராசரி அமெரிக்கர்களின் பொதுக்கருத்தைத் திரட்டுவதற்குப் போதுமான அளவுக்குப் பயனளிக்காது. எனவே, தீமையை அழித்த நன்மையானது அடுத்து தனது நிலையை ஸ்திரப்படுத்திக்  கொள்ள வேண்டுமல்லவா? எனவே எங்கெல்லாம் நன்மை போதுமான அளவுக்கு இல்லையோ அங்கெல்லாம் அமெரிக்க ஏவுகணைகள் நன்மையின் நற்செய்தியைச் சுமந்து செல்கின்றன. லிபியாவிலும், சிரியாவிலும் அமெரிக்கத் தலையீடுகள் இப்படித்தான் நியாயப்படுத்தப்படுகின்றன – அதாவது 'மனிதாபிமான அடிப்படையிலான' தலையீடு.

சீரியலின் ஒரு எபிசோடில் இருந்து அடுத்த எபிசோடுக்குச் செல்லும் முன் ஒரு சுப முடிவு தேவை – அந்த சுப முடிவு தான் தீமையின் வடிவமான ஒசாமா பின்லேடனின் கொலை. இதில் ஒசாமா இப்போது செத்தாரா முன்பே செத்தாரா என்பதற்குள் நாம் விரிவாக ஆராயத் தேவையில்லை.  இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் கடந்த பத்தாண்டுகளில் ஒசாமா பின்லேடன் என்கிற பெயர் அமெரிக்காவுக்கு அள்ளிக் கொடுத்தது என்னவென்பதும் இப்போது கொல்லப்பட்ட பின் அள்ளிக் கொடுக்கப்போவது என்னவென்பதும் தான் நமது கவனத்திற்குரியது. ஒருவேளை முன்பே செத்திருந்தாலும் அது அமெரிக்க நலன்களுக்கே பயன்பட்டுள்ளது – இப்போது செத்ததும் அமெரிக்க நலன்களுக்கே பயன்படப் போகிறது.

கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்க முதலாளிகளுக்குப் பொன்முட்டையிடும் வாத்தாக இருந்த அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கான ஒரு நொண்டிச் சாக்காக ஒசாமா இருந்தார் என்றால் இனி அடுத்து வரப்போகும் 'நல்லெண்ண அடிப்படையிலான' போர்களுக்கு அமெரிக்கர்களை உளவியல் ரீதியில் தயார்படுத்த இப்போது செத்துள்ளார்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் ஒசாமா பின்லேடனின் வாழ்வும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே இருந்தது – இப்போது அவரது சாவும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே அமைந்துள்ளது.

யார் பயங்கரவாதி? அல் காய்தாவா, அமெரிக்காவா?

பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அச்செய்தியை வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியாளர்களுக்கு அறிவித்த பராக் ஒபாமா, அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் அநியாயமாகக் கொன்ற ஒரு பயங்கரமான தீவிரவாதியை ஒழித்து நீதியை நிலைநாட்டி விட்டதாகவும், இத்தோடு நில்லாமல் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்கப் போர் தொடரும் என்றும் அறிவித்துள்ளார். அதாவது இதுவரை நிலைநாட்டியதைக் கடந்து இன்னமும் நிலைநாட்டப்படுவதற்கு இன்னமும் நீதியை அமெரிக்கா ஸ்டாக் வைத்துள்ளது என்பதே அந்த அறிவிப்பின் உள்ளார்ந்த அர்த்தம்.

பராக் ஒபாமாவின் வார்த்தைகள் ஒரு அம்சத்தில் உண்மையானது தான் – அதாவது அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொல்பவன் ஒரு பயங்கரமான தீவிரவாதியாகத் தான் இருக்க முடியும். அவன் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்கிற ஒபாமாவின் ஆசையைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது – அது நியாயமானது தான். எமது ஆசையும் கூட அதுவே தான். நாம் எமது வாசகர்களையும் பொதுமக்களையும் ஒபாமாவின் இந்த ஆசையை நிறைவேற்றி வைக்குமாறு கோருகிறோம். ஆனால், ஒசாமா பின்லேடன் ஒழிந்த பின் இப்போது உலகிலேயே பயங்கரமான தீவிரவாதி யாராக இருக்கும் என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அது நியாயமானது தான். எனவே அப்படியொரு தீவிரவாதியை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது வினவின் தலையாய கடமையாக  கருதுகிறோம்.

இந்த பயங்கரவாதியை நீங்கள் லேசில் எடை போட்டு விடலாகாது. உலகின் அத்துனை கண்டங்களிலும் அதன் சகல மூலைகளிலும் இந்த பயங்கரவாதி கால் வைத்த இடத்திலெல்லாம் சர்வநாசத்தை விளைந்துள்ளான். அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இளம் பெண்கள் தம் பெற்றோர் கண்முன்னேயே கற்பழிக்கப்பட்டுள்ளனர். தாய்மார்கள் தமது பிள்ளைகள் முன்பே மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். ஒன்றுமறியாத சிறு பிள்ளைகள் இந்த பயங்கரவாதி வீசிய குண்டுகளில் சிதைந்து போயுள்ளன. கருவிலிருக்கும் சிசு வரையில் ஊடுருவும் வீரியம் மிக்க அந்த குண்டுகளினால் பிறக்கும் குழந்தைகள் உருவமற்ற வெறும் சதைக்கோளங்களாகப் பிறந்துள்ளன.

ஒசாமா பின்லேடனாவது எந்த நீதிமன்றத்தாலும் விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டவனில்லை – ஆனால், நாங்கள் அடையாளம் காட்டுவதோ சர்வதேச நீதிமன்றத்தாலேயே குற்றவாளி  என்று தீர்ப்பளிக்கப்பட்ட பயங்கரவாதியை. இன்னமும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உலாவும் அந்தத் தீவிரவாதி வேறு யாரும் இல்லை – அது அமெரிக்கா தான். உலகெங்கும் ஒரு ஆக்டோபஸின் கரங்களைப் போல் விரியும் அமெரிக்காவின் பயங்கரவாதக் கொலைக் கரங்கள் விளைவித்த சர்வநாசங்களைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பை இங்கே வழங்குகிறோம். முதலில் அமெரிக்காவின் கொல்லைப்புறமான லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து துவங்குவோம்.

அமெரிக்க பயங்கரவாதம்

அமெரிக்க பயங்கரவாதம் – தென் அமெரிக்க சாட்சியங்கள்!

வட அமெரிக்க கண்டத்தையும் தென்னமெரிக்க கண்டத்தையும் இணைக்கும் மெல்லிய நிலப்பரப்பில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறிய நாடு நிகரகுவா. 1936-ல் தொடங்கி சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தது சோமோசா சார்வாதிகார கும்பல். இன்றைக்கு உலகமக்களுக்கு ஜனநாயக விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இதே யோக்கிய அமெரிக்கா தான் அன்று மக்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த சோமோசா கும்பலுக்கு உற்ற பங்காளி.

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வுகள் ஒரு பௌதீக வடிவமாக ஸான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் வடிவில் உருக்கொண்டு எழுந்து சூறாவளியாய்ச் சுழன்றடித்ததில் சோமோசா குடும்பத்தின் கடைசி வாரிசும் அப்போது அதிகாரத்திலிருந்த கொடும் சர்வாதிகாரியுமான அனடேஸியோ சோமோசா டெபாயேல் 1979-ம் ஆண்டு அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். மக்களின் விடுதலை உணர்வுகள் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பதை அமெரிக்கா உணர்ந்திருந்தது. 77-ம் ஆண்டே இதை முன்னறிந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இராணுவ உதவிகளை வழங்கியிருந்தார். ஆனாலும் சுழன்றடித்த மக்களின் கோபக் கனலில் சோமோசா சர்வாதார ஆட்சி கவிழ்ந்து சான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சோமோசா கும்பலுக்கு விசுவாசமான கூலிப்படையினரைப் பொறுக்கியெடுத்த அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ, அவர்களுக்கு கான்ட்ராஸ் என்று பெயரிட்டு பயங்கரவாத நாசவேலைகள் செய்வதற்கு பயிற்றுவித்தனர். இதற்காகவே "ஸ்கூல் ஆப் அமெரிக்கானாஸ்" என




NATO starts Libyan surveillance, while U.S., UK, France mull no-fly zone

அமெரிக்கா உட்பட மேற்கு வல்லரசு நாடுகள் மனிதாபிமானத் தலையீடு என்ற போர்வையில் லிபியாவின் மீது மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக லிபியா மற்றுமொரு ஈராக் ஆகவோ அல்லது ஆப்கானிஸ்தானாகவோ போர்கள் நிறைந்த பூமியாக உருமாறி வருகின்றது. ஓய்வின்றி நாட்டின் நாலபாகங்களிலும் தொடரும் யுத்தத்தினால் மனிதாபிமான அவலங்கள் நாளுக்குக் நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடாபியின் ஆதரவு படைகளுக்கும் எதிர்ப்பு படைகளுக்குமிடையே மாறிமாறி இடம்பெற்றுவரும் மோதல்களால் அப்பாவி பொதுமக்கள் பலியாக்கப்பட்டுக்கொண்டிருக்கிரார்கள்.
பிரெஞ்சு, பிரிட்டிஷ், அமெரிக்க விமானங்கள் லிபியாவில் குண்டுவீசி கடாபியின் பிடியிலிருந்து மனித உயிர்களைக் காப்பாற்றுவது என்ற போலியான கோஷத்திட்கெதிராக ஆயிA Libyan youth who has joined the forces against Libyan leader Moammar Gadhafi helps organize ammunition at a military base in Benghazi, eastern Libya, Tuesday.க்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொள்ளப்பட்டுவருகின்றனர். சகல இராணுவ பலங்களையும் கொண்ட இராணுவ வல்லரசுகள் ஒன்றுசேர்ந்து கடாபியின் எதிர்ப்பு படைகளுடன் இணைந்து கடாபியின் ஆதரவுப்படைகளை இதுவரை தோற்கடிக்க முடியவில்லை. ஏகாதிபத்திய போட்டிகளுக்கு மத்தியில் அரசியல் பொருளாதார நலன்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் லிபியாவில் செயற்படும் வல்லரசு படைகள் தமது நலன்கள் அடையப்படும் வரை ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடந்ததைப் போன்று லிபியாவையும் யுதத்தக் களமாக்கி வேடிக்கை பார்க்கும் பழக்கத்தை தொரந்தும் முன்னடுத்துக்கொண்டிருக்கின்றன. இது ஓர் ஏகாதிபத்திய யுத்தமாகும். . லிபியா ஒரு ஒடுக்கப்பட்ட, முன்னாள் காலனித்துவ நாடாகும். இத்தகைய நாடுகளின்மீது ஏகாதிபத்திய சக்திகளால் நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் நாட்டில் ஒருபோதும் சுபீட்சத்தை ஏற்படுத்தாது. மாறாக அவை நாட்டை அழிவுப்பாதைக்கே இட்டுச்சென்று கொண்டிருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த யுத்தம் ஜனநாயகரீதியான எந்த அங்கீகாரமும் இல்லாமல் நடந்தேறி வருகின்றன. மேலும் சம்பந்தப்பட்ட நாடுகளின் மக்கள் இதனை ஆதரிப்பதான எந்த அறிகுறியும் தெரியவில்லை. சமூகத் திட்டங்களுக்கு பணமில்லை என்று அறிவிக்கும் அதே அரசாங்கங்களாலேயே மீண்டுமொருமுறை ஒரு யுத்தத்திற்கு பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது.

கடாபியின் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது தான் ஒரு இரத்தக்கறை படிந்த சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு ஜனநாயக எதிர்ப்பு இயக்கத்தை தாங்கிப் பிடிக்கும் என்று கூறுவோர் பின்வரும் கேள்விக்கு பதிலளித்தாக வேண்டும்: ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் எழும் அனைத்துவித எதிர்ப்புக்கு எதிராகவும் காட்டுமிராண்டித்தனமான வன்முறையைக் காட்டிவரும் ஆட்சிகளுக்கு எதிராக, இந்த பெரும் சக்திகள் ஏன் இதே மாதிரியான முன்னெடுப்புக்களை மேட்கொள்ளவில்லை? அடுத்து, அமெரிக்காவின் ஐந்தாவது கப்பற்படைத் தொகுதியின் தலைமையிடமாக இருக்கும் பஹ்ரெயினில், ஷேக் அல் கலீஃபா சவூதி ஆதரவுடன், நிராயுதபாணியான போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளி உள்ளார், அதற்கென்ன பதில்? காசாவில் என்ன நடக்கிறது, இதே சக்திகள் தானே இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்வதில் சேர்ந்து நிற்கின்றன? ஏமனில் என்ன நடக்கிறது, அங்கே மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சலே ஒரு சில வாரங்களுக்கு முன்னர் சுமார் 50 போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளினாரே? மேலும் சிரியாவில் பொதுமக்கள் தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கையால் பலியாக்கப்பட்டுக்கொண்டிருக்கிரார்களே   

துனிசிய ஆட்சியிலிருந்து ஜைன் எல் ஆப்தீன் பென் அலி, மக்கள் பேரெழுச்சியால் தூக்கிவீசப்பட்டு வெறும் இரண்டு மாதங்கள் தான் ஆகிய நிலையில் அதனைத் தொடர்ந்து அதற்கடுத்த ஒரு மாதத்திலேயே எகிப்திய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கும்  தூக்கியெறியப்பட்டார். அவற்றின் விளைவு, மேற்கத்திய சக்திகள் அப்பிராந்தியத்தில் அவற்றின் முக்கியமான இரண்டு கூட்டாளிகளை இழந்துள்ளது. 

அமெரிக்காவும், ஐரோப்பாவும் கடாபியோடும், இந்த சர்வாதிகாரிகளோடும் கடைசி நிமிடம் வரையில் நெருக்கமாக இணங்கியிருந்தனர். லிபியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைக்கு உரக்க கூச்சலிட்ட பிரான்ஸ், பென் அலிக்கு எதிராக முழுவீச்சில் எழுச்சிகள் நடிபெற்ற  போது அவருக்கு பொலிஸ் உதவியை அளிக்க முன்வந்தது.

ஒரு காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரியும், மேற்கத்திய சக்திகளின் ஒரு நெருங்கிய கூட்டாளியுமான கடாபிக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பு, தொடக்கத்தில் வேண்டுமானால் லிபிய மக்களின் நிஜமான மனக்குறைகளை வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால் அபிவிருத்தி குன்றிய பாலைவன அரசான லிபியாவில் பெரிய சக்திகளின் அசிங்கமான வேலைகளைச் செய்யத் தயாராக இருந்த சக்திகள் உடனடியாக ஒன்றுதிரண்டன. தேசிய இடைமருவு சபை (National Transitional Council)யின்  பிரபலங்களிடையே அந்த சக்திகள் காணத்தக்கதாய் இருந்தன, இவர்கள் நாட்டின் கனிம வளங்களை மறைமுகமாகச் சுரண்ட சர்வதேச எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவாதம் அளித்ததோடு மட்டுமில்லாமல், தங்களின் சொந்த நாட்டின்மீதே குண்டுவீசவும் அழைப்பு விடுத்தனர். தேசிய இடைமருவு சபை என்பது, ஏகாதிபத்திய சக்திகளின் நிலைப்பாட்டிலான நகர்வுக்குப் பதிலிறுப்பாக கடாபியிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்ட பழைய ஆட்சியின் மூத்த அதிகாரிகள் கொண்டதாகும்.    

பில்லியன் கணக்கில் வியாபார உடன்பாடுகளைப் பேச பாரீசில் பெரும் ஆரவாரத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கடாபியை வரவேற்ற ஜனாதிபதி சார்க்கோசி இப்போது, தனது நேட்டோ கூட்டாளிகளை விடுங்கள், தனது சொந்த வெளியுறவுத்துறை அமைச்சரைக் கூட கலந்தாலோசிக்காமல் தேசிய இடைமருவு சபையை (National Transitional Council) லிபியாவின் உத்தியோகப்பூர்வ பிரதிநிதியாக அங்கீகரித்துள்ளார்.

மத்தியதரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவின் மிக அண்மையில் இருக்கும் ஒரு நாடான லிபியாவில் ஒரு நீண்டகால யுத்தத்தால் ஏற்படக்கூடிய பொருளாதாரரீதியான, பூகோள-அரசியல்ரீதியான மற்றும் பாதுகாப்புரீதியான தாக்கங்களைக் குறித்து யாரும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை. இராணுவ நடவடிக்கையின் விளைவுகளைக் குறித்து எச்சரிக்கை விடுக்கும் பெரும்பான்மையினர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்குப் பின்னர், மற்றொரு இராணுவ சாகசத்தில் பெரிய விருப்பமில்லாத இராணுவத்தின் பழமைவாத வட்டாரங்களைச் சேர்ந்தவர்களாய் உள்ளனர். 
எகாதிபத்ய போட்டி

லிபிய ஏகாதிபத்திய தாக்குதலில் முக்கிய பங்காளர்களாக இருக்கும் அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்ஸூம் எதிர்கால கொள்ளைப்பொருட்களை அவற்றின் கட்டுப்பாட்டில் பெறுவதற்காக ஒன்டோடொன்று போட்டியிட்டு வருகின்றன. இந்த மோதல், இராணுவ நடவடிக்கையை யார் கட்டுப்படுத்துவது என்பதன்மீது ஒரு முரண்பாட்டிற்கு இட்டுச் சென்றுள்ளது. லிபியாவில் குண்டுவீசுவதில் பங்கெடுத்திருக்கும் கூட்டணியில் உள்ள அனைவரும் இதில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென்ற பிரான்சின் முறையீட்டை விடுத்து, நேட்டோவின் கண்காணிப்பு இருக்கட்டும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர், அந்த விஷயத்தில் வாஷிங்டனும், இலண்டனும் வெற்றி பெற்றன.

எவ்வாறிருப்பினும், லிபியாவின் மீதான கட்டுப்பாட்டைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் அதிகமாக, பல விஷயங்கள் பணயத்தில் உள்ளன. ஏகாதிபத்திய சக்திகள் மத்தியகிழக்கு மற்றும் ஒட்டுமொத்த ஆபிரிக்கா முழுமையையும் அவற்றின் நோக்கத்தில் கொண்டிருக்கின்றன.

தந்திரோபாய முக்கியத்துவம்
Libya calls for ceasefire in response to UN's no-fly zone resolution
உலகின் முக்கிய எண்ணெய்வள பிராந்தியமாக இருக்கும் மத்தியகிழக்கில் ஏகாதிபத்தியத்திற்கான தந்திரோபாய முக்கியத்துவம் குறித்து குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஆபிரிக்காவிலும் கணிசமான அளவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் கண்டறியப்பட்டுள்ளதால் இதுவும் பெரிய மதிப்பார்ந்த ஒரு பரிசாக கருதப்படுகிறது.

பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் 2008 எரிசக்தி ஆய்வின்படி, 2007இன் இறுதியில் ஆபிரிக்கா 117,481 பில்லியன் பரல்களை அல்லது உலக எண்ணெய்வளத்தில் 9.48 சதவீதத்தைக் கொண்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவின் எண்ணெய் உற்பத்தியில் நைஜீரியா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து மற்றும் அங்கோலா ஆகிய ஐந்து நாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவை ஆபிரிக்காவின் மொத்த உற்பத்தியில் 85 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன

பல தசாப்தங்களாக லிபியாவின் எரிசக்தி வளங்கள் ஏகாதிபத்திய சதிவேலைகளின் இலக்காக அந்நாட்டை மாற்றியிருக்கும் நிலையில், அங்கு இராணுவத் தலையீடு என்பது அங்கிருக்கும் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும், அப்பிராந்தியத்தில் ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுக்கு எதிராக தீவிரமாக திரும்பியிருக்கும் புரட்சிகர இயக்கங்களை அடக்கி வைக்கவும் இந்த யுத்தம் பயன்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கிழக்கில் எகிப்தையும், மேற்கில் துனிசியாவையும் எல்லைகளாக கொண்டிருக்கும் லிபியாவில் இராணுவத்தை நிறுத்துவதென்பது, அரபு உலகம் முழுவதிலும் உள்ள புரட்சிகர இயக்கங்களை மிரட்ட பெரிய சக்திகளுக்கு உதவியளித்துள்ளது..

அந்நாட்டில் வெளிநாட்டுத் துருப்புகள் இராணுவ ஆக்கிரமிப்பு செய்வதை நடவாமல் பார்த்துக் கொள்வது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானத்தில் உள்ள குறிப்பு வெறும் கண்துடைப்பாகும். இராணுவ அவசியமென்பது(Military necessity) அதன் சொந்த தர்க்கத்தைக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானும் சரி, ஈராக்கும் சரி அமெரிக்கத் துருப்புகளால் உத்தியோகபூர்வமாய் "ஆக்கிரமிக்கப்படவில்லை" என்பதால் அந்த இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான அமெரிக்க சிப்பாய்கள் நிரந்தரமான நிலைகொண்டிருக்கிரார்கள் என்ற உண்மையை மாற்றிவிடாது.
அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகள் இராணுவத் தலையீட்டில் இறங்க வசதியாய் "பிராந்திய ஆதரவு(Regional cooperation)" என்கின்ற போர்வையை அளிக்கும் வகையில், லிபியாவின்மீது பறக்கத்தடைவிதிக்கப்பட்ட வலயம்(No-fly zone) ஒன்றுக்கு அரபு லீக் தான் அழைப்புவிடுத்தது என்பது முக்கியமான விடயமாகும். தங்களின் சொந்த ஆட்சிக்கு எதிராக கிளர்தெளுந்துள்ள எதிர்ப்பாளர்களைக் கைது செய்யும், சித்திரவதைப்படுத்தும், சுட்டுத்தள்ளும் வேலைகளில் இருக்கும் சவூதி அரேபியா, பஹ்ரெயின், மற்றும் ஏனைய எமிரேட்களின் பிரதிநிதிகள் எல்லாம், லிபியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதான நோக்கத்தைக் கொண்டிருப்பதாய் கூறி இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்!

மேலும் உலக இயற்கை எரிவாயு வளங்களில் 8.22 சதவீதத்தைக் கொண்டிருக்கும் ஒரு இடமாகவும் இப்பிராந்தியம் விளங்குகிறது. பாக்ஸைட், கோபால்டு, தொழில்துறை வைரம், பாஸ்பரேட், பிளாட்டினம் மற்றும் ஜிர்கோனியம் போன்ற தரமான உலக கனிமங்களைக் கொண்டிருப்பதில் முதலாவதாகவோ அல்லது இரண்டாவதாகவோ இருக்கிறது. மேலும் கணிசமான அளவிற்கு தங்க படிமானங்களையும் இப்பிராந்தியம் கொண்டுள்ளது.

லிபிய மீதான ஐ.நா வின் தீர்மானம்

லிபியா மீதான ஐ.நா வாக்கெடுப்பை பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவை உள்ளடக்கிய BRIC நாடுகள் அனைத்துமே புறக்கணித்துள்ளன. அதன்பின்னர், இந்த குண்டுவீச்சு குறித்த சீனா அதன் "கவலையைத்" தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் People's Daily, "மனிதாபிமான தலையீடென்பது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் இராணுவ தலையீடு செய்வதற்கான ஒரு மன்னிப்பு மட்டும் தான்," என்று தெரிவித்துள்ளது. "நீதியால் உந்தப்பட்டது" என்று கூறுபவர்கள் "ஆழமான அரசியல் மற்றும் பொருளாதார நலன்களால் உந்தப்பட்டுள்ளனர்" என்பதற்கு ஓர் எச்சரிக்கையாக, ஈராக்கில் நடத்தப்பட்ட "இரத்தத்தில் ஊறிய தலையீட்டை" அந்த அறிக்கை மேற்கோளிட்டுக் காட்டியது.

"பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு(Responsibility for security)" என்ற அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் 1973 தீர்மானத்தின் ஒரு புதிய நீட்சி, "உலக அரசியலமைப்பின்" மாதிரியில் இப்போது இருக்கிறது என்று கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி தெரிவித்தார்.

"இந்த நிமிடத்திலிருந்து சர்வதேச சமூகத்தின் மற்றும் ஐரோப்பாவின் பிரதிபலிப்பு ஒவ்வொரு முறையும் ஒரேமாதிரியாக தான் இருக்கும் என்பதை ஒவ்வொரு ஆட்சியாளரும், குறிப்பாக ஒவ்வொரு அரேபிய ஆட்சியாளரும் புரிந்துகொள்ள வேண்டும்," என்று சார்க்கோசி அறிவித்தார். ஐவரி கோஸ்ட் மற்றும் சிரியாவிற்கு தடைவிதிப்பதன் மூலமாக ஐ.நா தலையீடும் செய்யக்கூடுமென்றும் அவற்றின் பெயரை அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹாக் கடந்த மாதம் , டைம்ஸ்  நாளிதழால் ஆதரவளிக்கப்பட்ட "ஆபிரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகள்" மாநாட்டில் பேசினார். "21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வுகளான 2008 நிதியியல் நெருக்கடி மற்றும் 9/11 சம்பவத்தினையும் வட ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு சம்பவங்கள் ஏற்கனவே தாண்டிச் சென்றுவிட்டன" என்ற அறிவிப்புடன் பேசியிருந்தார் .

இந்த "மிக முக்கியமான சம்பவங்கள் அரேபிய உலகின் எல்லைகளோடு நின்றுவிட வேண்டிய அவசியமில்லை," என்றார். "அவர்களின் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்குரிய பாதையில் தடையாய் நிற்கும்" கடாபி போன்ற "ஏனையவர்கள்" இருக்கும் நாடுகளான சூடான், சிம்பாவே, ஐவரி கோஸ்ட் ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.

.நா. பாதுகாப்பு சபையின் 1973 தீர்மானத்தை ஒரு திருப்புமுனையாக மேற்கோளிடுவது சார்க்கோசி மட்டுமல்ல. மேலும் "பாதுகாக்கும் உரிமை" (Right to Protect) அல்லது R2P என்றறியப்படும் கோட்பாட்டின் அடிப்படையில் இராணுவ நடவடிக்கைக்கு ஐ.நா. சபை அங்கீகாரம் அளித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

ஐக்கிய நாடுகள் சபையால் 2005இல் மட்டும் தான் R2P கையாளப்பட்டது. இந்த தீர்மானம் தேசிய இறையாண்மையைக் கடந்து "பொதுமக்களும், பொதுமக்கள் நிறைந்த பகுதிகளும் தாக்குதல் அச்சுறுத்தலின்கீழ் வரும் போது" அவர்களைக் காப்பாற்றும் அடித்தளத்தில், ஏகாதிபத்திய சக்திகளுக்கு எங்கெல்லாம் அவற்றிற்குப் பொருத்தமாக இருப்பதாக காண்கின்றனவோ அங்கெல்லாம் யுத்தம் தொடுக்க அவற்றிற்கு இத்தீர்மானம் முழு சுதந்திரம் அளிக்கிறது.

இராணுவ நடவடிக்கையை அனுமதிக்கும் ஐ.நா. சட்டவரைவின் 7ஆம் பிரிவின்கீழ் இருக்கும் "அமைதியின் மீது அச்சுறுத்தல்கள்", "தாக்குதல் நடவடிக்கைகள்" குறித்த தீர்மானங்கள், கடந்தமுறை ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் சியாரா லியோனில் (Sierra Leone) நடத்தப்பட்ட தலையீடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

தலையீட்டின் அரசியல் காரணங்கள்

ஜனாதிபதி சார்க்கோசியும் சரி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரோனும் சரி இருவருமே தலையீடு செய்வதில் அவர்களின் சொந்த உள்நாட்டு அரசியல் காரணங்களைக் கொண்டுள்ளனர். இன்னும் ஒரு வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கும் நிலையில், கருத்துக்கணிப்புகளில் வீழ்ச்சி கண்டிருக்கும் சார்க்கோசி, ஒரு மூர்க்கமான வெளிநாட்டு கொள்கை மூலமாக அந்நிலையைச் சரிசெய்து கொள்வதற்கு நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

தனது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு பெருகிய எதிர்ப்பை முகங்கொடுத்துவரும் கேமரோன், அவருடைய முன்மாதிரி மார்கிரட் தாட்சர் 1982 மால்வினாஸ் யுத்தத்தை செய்ததைப் போன்று, லிபியாவிற்கு எதிரான ஒரு யுத்தம் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் என்று நம்புகிறார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்களால் பிரிட்டிஷ் இராணுவம் பலவீனப்பட்டிருக்கும் நிலையில், சுயாதீனமாக தலையீடு செய்ய முடியாமல், கேமரோன் அமெரிக்காவை இதில் ஈடுபடுத்த பெரும் பிரயத்தனம் செய்துள்ளார்.


S.H.M Rizvy LL.B(Col.)


'கவர்னரை பதவியிலிருந்து அகற்று'
'ஜனநாயகம் மலரட்டும்'
சிரியாவின் தேரா நகரில் திடீரென ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கின்றன...

அதேசமயம், சகல பிரதான ஊடகங்களும் அதை "மக்கள் புரட்சி" என
கோசமிடுகின்றன.

அதேசமயம், உள்ளுர் கவர்னர் பதவியகற்றப்படுகிரார்.

அதேசமயம், சகல உள்ளுர் அரச எதிர்ப்பு படைகளும், பிரத்தியேகமாக வெளிநாடுகளில் வசிக்கும் சிரியர்கள் அனைவரும் ஊடகங்களால் 'பேட்டி' காணப்படுகின்றனர்...செய்திகளின் முக்கிய தலைப்புக்களாக அவை வெளிவருகின்றன.

அதேசமயம், முன்னொருபோதும் இப்பிரதேசங்களில் காணப்பட்டிராத பல்வேறு ஊடகங்களின் செய்தியாளர்களால் பல செய்தி அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. எப்போதும் இல்லாதவாறு அனைத்தும் இடம்பெறுகின்றன.

அதேசமயம், எனது வாசிப்பு கண்ணாடியை சுத்தம் செய்து எனது பேனா முனையை கடதாசியில் வைத்து எழுத தொடங்குகிறேன்..."சிரியா மட்டுமல்ல மழு மத்திய கிழக்கும், முழு முஸ்லிம் நாடுகளும் மாற்றமுறும் மிக விரைவில்...அராஜகங்களிலும் கொடுங்கோண்மைகளிலுமிருந்து...இஸ்லாமிய எழுச்சியை நோக்கி"

By S.H.M Rizvy.


 http://blogs.state.gov/images/Dipnote/behind_the_scenes/2011_0414_civilians_libya_m.jpg
லிபிய பொதுமக்கள்

http://www.dw-world.de/image/0,,2021021_1,00.jpg
அனாதைகள்

http://emajmagazine.files.wordpress.com/2010/07/turkish-gastarbeiter-wdr-de.jpg
வெளிநாட்டு வேலையாட்கள்

http://www.centree.cn/en/images/b_2_4.jpg
மீண்டும் வீடு நோக்கி...!!



லிபிய பொதுமகனின் நீண்ட பயணம்

"நேட்டோ படைகள் லிபிய பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்கும்"
இவ்வாறுதான் எங்களுக்கு சொல்லப்பட்டது...
எந்த பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்கப்படும்??
கடாபிக்கு ஆதரவளிக்கும் பொதுமக்களுக்குமா??..... அவ்வாறு நான் நினைக்கவே இல்லை!!

அவ்வாறாயின், கடாபியை எதிர்க்கின்ற பொதுமக்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பளிக்கப்பட வேண்டும்.

ஆனால் கடாபியை எதிர்க்கின்ற ஒரு பொதுமகன் ஆயுதம் தரித்து போராடத் தொடங்கினால்...?
அவன் அப்போதும் "பொது மகனாகவே" கருதப்படுவானா??... நான் அவ்வாறு நினைக்கவே இல்லை!!
இருப்பினும், நேட்டே படைகள் அவனுக்கு பாதுகாப்பளிக்கும். ஏனெனில்,
"நேட்டோ படைகள் லிபிய பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்கும்"
அவ்வாறுதான் அவர்களுக்கும் சொல்லப்பட்டது.

ஆனால்,
சில லிபிய பொதுமக்கள் மீன்பிடி வள்ளங்கள் மூலம் இத்தாலியின் தென் பகுதியை அபாயங்களுடன் சென்றடைந்து அங்கு அரசியல் தஞ்சம் கோரினால்...?
 அவர்களுக்கு அது வழங்கப்படுமா??.....இல்லை, நான் அவ்வாறு நினைக்கவே இல்லை!!
அவர்கள் கடத்தப்படுவார்கள்,
அல்லது பிரான்ஸின் எல்லைகளில் அனாதைகளாக கைவிடப்படுவார்கள்.
பின்னர் அவர்களுடைய எசமான்கள் அவர்களை லிபியாவுக்கு திருப்பியனுப்பும் வரை பிரான்ஸ் அவர்களை ஜேர்மனிக்கு சட்டவிரோத தொழிலாளர்களாக கள்ளக்கடத்தல் செய்து பொதுமகனுக்குரிய சிவில் உரிமைகளை களையும்! (மற்றும்படி, அவர்கள் சட்டவிரோத வேற்றுவாசிகளாகவே அறியப்படுவர்.)

மீண்டும் ஒருவேளை லிபியாவுக்கு அவர்கள் திரும்பி வந்தால்...?
கடாபி அவர்களுக்கு வீடு கொடுத்து வரவழைப்பார்?
தொழிலும் கொடுத்து அவர்களின் பிள்ளைகளுக்கு இலவச கல்வியும் கொடுப்பார்?
அவ்வாறு ஒருவேளை  கொடுத்தாலும், அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்து பெரியாட்கள் ஆனதும் மீண்டும் கடாபியின் கொடுங்கோண்மையை அகற்றும் படியே கோறுவர்...
ஏனெனில்...ஏனெனில் கடாபி சார்கோஸியைப் போன்றோ அல்லது பேர்லுஸ்கோனியைப் போன்றோ ஜனநாயகவாதி அல்ல!!
...நான் அவ்வாறு நினைக்கவும் இல்லை.



(This is a translation of a novel by novolist Sherlock Hommos)
Translated by me, S.H.M Rizvy.
பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை?

இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!

இதை இன்று நாம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். ஆண்கள் பயன்படுத்துகின்ற உள்ளாடை முதற்கொண்ட அனைத்து பொருள்களின் விளம்பரங்களிலும் அரை குறை ஆடையுடன் கூடிய பெண்களின் கவர்ச்சியையே முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் பெண்களின் கவர்ச்சியே வியாபார வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குவதைப் பார்க்கலாம்.

பெண்களும், 'நாங்கள் நவநாகரீக மங்கைகள்' எனக் கூறிக் கொண்டு ஆணாதிக்க வர்க்கங்களின் வக்கிர புத்திக்கு இரையாகின்றனர். நாகரிகம் என்பது நாம் உடுத்துகின்ற ஆடையைக் குறைப்பதில் இல்லை என்பதை ஏனோ பெண்கள் உணர்ந்துக் கொள்வதில்லை! இன்றைய சமூக சீர் கேட்டிற்கும், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிகம் உள்ளாவதற்கும் மூலகாரணமாக விளங்குவது நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் தங்களின் ஆடை குறைப்பில் ஈடுபட்டது என்றால் அது மிகையாகாது.

இஸ்லாம் பெண்களைக் கண்ணியமானவர்களாகக் கருதுவதால் இத்தகைய சீர்கேட்டை ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இறுக்கமான அல்லது உள்ளே உள்ளவைகளை வெளியே காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் மெல்லிய ஆடைகளை அணிபவர்களை, 'ஆடை அணிந்தும் அணியாதது' போன்றவர்களாவார்கள் என்று கூறி இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: 'ஆடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்' ஆதாரம்: தபரானி.

சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:-

மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: 'அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்' (ஸஹீஹ் முஸ்லிம்).

மேலும் பிற்காலத்தில் வரக்கூடிய பெண்கள் ஆடைக் குறைப்பில் ஈடுபாடுவார்கள் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறி அவர்களின் செய்கைகள் இவ்வாறு இருக்கும் எனவும் எச்சரித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எனவே தான் முஸ்லிம்கள் 'நவநாகரீக மங்கைகள்' என்ற பெயரில் ஆடைக் குறைப்பு செய்வதை தவிர்த்து கண்ணியமான முறையில் ஆடை அனிந்து வெளியே செல்கிறார்கள்.

இறைவன் கூறுகிறான் : -

"நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்"
(அல் குஆன் 33:59)


முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் புர்கா அல்லது நிகாப் என்று அழைக்கப்படும் முகத்திரை அணிவதை முற்றாக தடை செய்யும் சர்ச்சைக்குரிய இனவாத சட்டமொன்றை பிரான்ஸ் கடந்த திங்கட் கிழமை (ஏப்ரல் 11) அமுலுக்கு கொண்டுவந்துள்ளது. இச்சட்டமானது 2004 இல் இருந்து அமுலில் இருந்து வரும் பாடசாலைகளில் மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்யும் சட்டம் மற்றும் அரச அலுவலகங்களில் புர்கா அணிந்து வேலைசெய்வதை தடைசெய்யும் சட்டம் என்பற்றின் முற்றிலுமான நீடிப்பாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இச்சட்டத்தை மீறி புர்கா அணிபவர்களிடமிலுந்து 150 யூரோகள் அபராதமாக அறவிடப்படும் என்றும் நிகாப் அணிய வற்புறுத்துபவர்கர் எவரும் ஒரு வருட சிறைத்தண்டனைக்கும் 41000 டொலர்கள் அபராதமாக செலுத்த நேரிடும் என்றும் இச்சட்டம் குறிப்பிடுகின்றது.

பிரான்ஸ் 70 இலட்சம் முஸ்லிம்களை சிறுபான்மையாகக் கொண்ட நாடாகும். ஐரோப்பாவில் இது மிகப்பெரும் முஸ்லிம் பெரும்பான்மையாகக் கருதப்படுகின்றது. முஸ்லிம்கள் இங்கு சிறுபான்மையாக இருப்பதால் இப்புர்கா தடை சட்டம் இனவாத அல்லது இனத்துவேச சட்டமாகவே பலராலும் நோக்கப்படுகின்றது.


ஐநா பாதுகாப்பு சபையில் காடாபி மக்கள் ஆர்பாட்டங்களை மோசமாக அடக்க முயன்றமைக்கு   எதிரான தீர்மானங்கள் நேற்று  15 உறுப்பு நாடுகளினாலும் ஆதரவை பெற்று நிறைவேறியுள்ளது லிபியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை தடை, கடாபியின் சொத்துக்கள் முடக்கம் அத்துடன் கடாபி ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களை மிகவும் மோசமாக் ஒதுக்கியமை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும் குற்றவாளிகள் தண்டிக்க படவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.


மேற்குலக நாடுகள், முக்கியமாக அமெரிக்கா, பதவியில் இருந்து விலக்க நினைக்கும் அரசத்தலைவர்களில் வட கொரியாவின் கிம் ஜொங், ஜிம்பாவேயின்ரொபேர்ட் முஹாபே, கியூபாவின் fஇடெல் காஸ்ரோ, லிபியாவின் மும்மர் கடாபி ஆகியோர் முக்கியமானவர்.

நீண்டகால ஆட்சியாளர்.
இப்போது உள்ள அரச தலைவர்களில் மிக நீண்ட காலம் பதவியில் இருப்பவர் லிபியத் தலைவர் மும்மர் கடாபி. மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர். உலகெங்கும் உள்ள பல விடுதலை இயக்கங்களுக்கு உதவுபவர் என்று பல மூன்றாம் உலகநாடுகளின் மக்களால் போற்றப் படுபவர் மும்மர் கடாபி. 1969-ம் ஆண்டு ஒர் ஆயுதப் புரட்சி மூலம் அப்போது அரசாராக இருந்த இட்றிஸை பதவியில் இருந்து அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியவர் மும்மர் கடாபி. அப்போது அவருக்கு வயது 27. அப்போது அவர் சிறந்த புரட்சியாள்ராகவும், புதிய சேகுவேராவாகவும் மதிக்கப்பட்டார்.
கடாபி இஸ்லாமையும் சோசலிசத்தையும் கலந்து பசுமைப் புரட்சி என்ற நூல் எழுதினார்.
Related Posts with Thumbnails
உதயம்