
இது வரை 400 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள தெரிவித்துள்ளன.
இந்த இராணுவ கொலைகளை கண்டித்து லிபியாவின் நீதி அமைச்சர் இராஜினாமா செய்துள்ளார் அமெரிக்காவுக்கான லிபிய தூதுவர் படுகொலைகளை தான் கண்டிபதாக தெரிவித்துள்ளார் அதேவேளை ஐநா வுக்கான லிபிய ராஜதந்திரிகள் சர்வதேச நாடுகள் தலையிட்டு லிபிய அரசின் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
நடை பெரும் மனித படுகொலைகள் சர்வதேச சமுகத்தை தூண்டும் செயல் என்றும் ஐநா இந்த விடையத்தில் தலையிடவேண்டும் என்றும் குற்றவாளிகள் சர்வதேச இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும் என்றும் குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன இதேவேளை கடாபி நாட்டை விட்டும் வெளியேறி சென்றுள்ளார் என்ற தகவல் வெளியானது இதனை மறுக்கும் வகையில் லிபியா தேசிய தொலைக் காட்சியில் தோன்றிய கடாபி தான் திரிபோலியில்தான் இருப்தாகவும் சர்வதேச ஊடகங்கள் குரைக்கும் நாய்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து ஐநா பொது செயலாளர் பாகீ மூன் லிபியாவில் மனித உரிமை , மக்கள் ஒன்று கூடும் உரிமை , கருத்துரிமை ஆகியன கண்டிப்பாக முழுமையாக பாதுக்காக்கப் படவேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் இதேவேளை லிபிய இராணுவ அணி ஒன்று மக்களின் ஆர்பாட்டங்களுக்கு இராணுவ வீரர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்று அது வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் வலியுறித்தியுள்ளது நேற்று முன்தினம் லிபியாவின் 50 இமாம்கள் கூட்டாக லிபிய இராணுவத்துக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் பொதுமக்களை சுட்டு கொல்வதை நிறுத்துமாறும் பொது மக்களை கொலைசெய்வதை அல்லாஹ்வும் அவனில் தூதரும் தடுத்துள்ளார் என்றும் தெரிவித்திருந்தனர் என்பது குறிபிடத்தக்கது லிபியாவின் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களை சுட மறுத்த இராணுவ வீரர்கள் இராணுவத்தினால் கொலைசெய்யப்பட்டு எரிக்கபட்டுள்ள காட்சிகள் அடங்கிய வீடியோகள் youtube இல் வெளியாகியுள்ளது

லிபியாவின் மக்களின் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்றன இது வரை 1000பேராவது கொல்லப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன என்று பிரஸ்டிவி தெரிவிக்கின்றது லிபியாவின் ராஜதந்திரிகள் பலரும் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதுடன் கடாபி பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளனர்.

0 comments:
Post a Comment