
மேற்கத்திய நாடுகள் தற்போது ஈரானுடன் ஒத்துழைத்து வருவதாக அந்நாட்டு அதிபர் முகமத் அகமதுனிஜாத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மாஷாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர்,அதே சமயம் ஈரான் தனது அணு திட்டங்களை கைவிடாது என்றார்.
ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் தொடர்பாக மோதல் போக்கை மேற்கொண்டிருந்த மேற்கத்திய நாடுகள், தற்போது விவாதிக்க முன்வந்துள்ளனர்.
இன்றைய தினம் ஈரான் மிக முக்கியமான ஒரு நிலையை எட்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
0 comments:
Post a Comment